மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி மீண்டும் ஒரு ஊழல் பூதத்தை அடையாளம் காட்டியுள்ளார். சென்ற வருடம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக வெளியான CAGன் அறிக்கையிலிருந்து எழுந்து வந்த பூதத்தையே எப்படி அடக்குவது என்று தெரியாமல் மத்தியில் ஆளும் காங்கிரசு பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய CAG அறிக்கையிலிருந்து கிளம்பியுள்ள கே.ஜி பூதத்தை சர்வகட்சிகளும் மௌனமாய் இருப்பதன் மூலம் மக்களின் கவனத்திலிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் எண்ணை துரப்பணம் செய்யவும் ரிலையன்ஸ், கெய்ன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் மாபெரும் ஓட்டைகள் இருப்பதாகவும், அதன் வழியே புகுந்து புறப்பட்டுள்ள முகேஷ் அம்பானி, அரசுக்கும் மக்களுக்கும் பட்டை நாமம் சாற்றியிருப்பதாகவும் இப்போது வெளியாகியிருக்கும் CAG அறிக்கையின் முன்வரைவு கூறுகிறது.
குறிப்பாக கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு வயல்களை கண்டுபிடிக்கவும், அதற்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், ஆரம்பத்தில் ரிலையன்ஸ் செய்யவிருப்பதாக ஒப்புக் கொண்ட மூலதனச் செலவைக் காட்டிலும் இரண்டே வருடத்தில் மும்மடங்கு அதிகமாக செலவு செய்ததாக கள்ளக்கணக்கு எழுதியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் போடும் போது ஒப்புக் கொண்ட அளவுக்கு எரிவாயு ரிசர்வ் இல்லை என்று சொல்லி செலவு செய்ததாக அவர்கள் காட்டிய தொகையையும் அரசிடம் இருந்தே கறந்துள்ளனர். இது இந்த ஊழலின் ஒரு அம்சம்.
இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. அதாவது, எரிவாயு கண்டுபிடிக்க (to be explored) வேண்டிய பகுதிகள் என்று குறிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட (discovered) பகுதிகள் என்று போர்ஜரி வேலையும் செய்துள்ளது ரிலையன்ஸ். கிருஷ்ணா கோதாவரி சுழிமுனையில் இயற்கை எரிவாயு ரிசர்வ் இருப்பதை உறுதி செய்து கொண்ட அரசு, அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிடம் கொடுக்கிறது. இதில் ஐந்து சதவீத பகுதியில் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்த ரிலையன்ஸ், அருகில் உள்ள மற்ற பகுதிகளில் தானே எரிவாயுவைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி அப்பகுதிகளையும் அமுக்கிக் கொண்டிருக்கிறது.
இவ்விவகாரத்தில், அரசுக்கும் தனியாருக்கும் இடையேயான ஒப்பந்தம் என்பது உற்பத்திப் பகிர்வின் (PSC – Production-sharing contract) அடிப்படையில் லாபப் பகிர்வு இருக்கும் என்றும், அதில் மூலதனச் செலவுக்கு ஏற்ப லாப விகிதங்கள் பகிர்ந்து கொள்ளப் படும் என்றும் குறிப்பிட்டிருப்பதால் தான் ஊழல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு, நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மோசடிகளுக்கெல்லாம் பெட்ரோலியத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் உடந்தையாக இருந்ததாகவும் அறிக்கை சொல்கிறது.
தற்போது நடப்பில் இருக்கும் உற்பத்திப் பகிர்வு அடிப்படையிலான ஒப்பந்தங்கள் ஊழலுக்கு வழிகோலுவதால், இதற்கு மாற்றாக உற்பத்தியின் அடிப்படையில் ராயல்டி விதிப்பது சரியாக இருக்கும் என்று கணக்குத் தணிக்கை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். மேலும், செனற் ஆண்டு வெளியான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழலைப் போல் அல்லாமல், இந்த ஊழலில் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் அதே நேரம் இந்த ஊழலின் அளவு முந்தைய ஊழல்களைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றும் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆயினும் சில சுயேச்சையான கணக்கீடுகள், இந்த ஊழலின் அளவு சற்றேரக்குறைய 2ஜி அலைக்கற்றை ஊழலின் அளவை ஒத்திருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
கணக்குத் தணிக்கை அதிகாரியின் வரைவு அறிக்கை வெளியாகி மத்தியில் ஆளும் காங்கிரசு கும்பல் படுகேவலமாக அம்பலமாகி நிற்கும் இந்த நிலையை பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா தனது சொந்த அரசியல் நலனுக்காகக் கூட பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை. காங்கிரசோடு சேர்ந்து கிழிந்திருப்பது அம்பானியின் கோவணமும் தான் என்பதால் பெயரளவுக்கு முனகிவிட்டு அடங்கிவிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியான போது சம்பிரதாயமாகவாவது சாமியாடிய போலி கம்யூனிஸ்டுகள் இப்போது ‘பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு’ என்கிற ரீதியில் இந்த ஊழலைப் பற்றி கருத்துத் தெரிவித்து முடித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
ஏற்கனவே கிருஷ்ணா கோதாவரி எரிவாயு வர்த்தகத்தில் அம்பானி சகோதர்களுக்குள் குத்துவெட்டு நடந்த போது அதில் தலையிட்டு பஞ்சாயத்துப் பேசி தீர்த்து வைத்ததே சுப்ரீம் கோர்ட்டு தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் கம்பெனி எரிவாயுவுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததாக அனில் அம்பானி ஆந்திர அரசு மற்றும் உர அமைச்சகங்கள் குற்றம் சாட்டிய போது தலையிட்ட காபினெட் குழுவும் உச்ச நீதிமன்றமும் முகேஷுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியிருந்தன.
ஆக, ஊழல் சட்டபூர்வமானது என்பதைக் கடந்து, வளங்களைத் திருடிச் செல்வதில் முதலாளிகளுக்கு ஏதாவது பிரச்சினையேற்பட்டால் அதை பைசல் பண்ணிவிட நீதிமன்றமும் அரசுமே தயாராய் நிற்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
சமீப நாட்களாக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்து வரும் முதலாளித்துவ ஊடகங்களோ, இதைப் பற்றி எதுவும் பேசாமல் மயான அமைதியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஒரு செய்தியாகக் குறிப்பிடும் போது கூட, உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதால் தான் ஊழல் நடந்து விட்டது என்றும், கணக்குத் தணிகை அதிகாரி முன்மொழிந்திருக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டால் பிரச்சினை தீர்ந்தது என்பது போலும் சொல்கிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு முறை ஊழல் வெளியாகும் போதும் அதைப் பற்றி தனித்தனியே விவாதிப்பதும், அதில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வாய்கிழியப் பேசி விட்டு, அப்போதைக்கு கையில் மாட்டும் யாராவது ஒரு பலியாட்டின் தலையில் பாவக் கணக்கை எழுதி வைத்து விட்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் வாடிக்கையாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரமுக்கு ஒரு ராசா, காமன்வெல்த்துக்கு ஒரு கல்மாடி என்று ஏற்கனவே மாட்டிக் கொண்ட பலியாடுகளைப் போல் இதற்கும் இனி ஒரு பலியாடு கண்டுபிடிக்கப்படுவார். பார்வையற்ற நான்குபேர் யானையைத் தடவிப் பார்த்துப் புரிந்து கொள்ள முயல்வதைப் போன்றே இவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது.
இந்த ஊழல்கள் அனைத்திலும் ஒரு இணைப்புக் கண்ணி இருப்பதை இவர்கள் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களையும் அவ்வாறு பார்த்துப் புரிந்து கொள்ள விடுவதில்லை. இப்போது வெளியாகியிருக்கும் ஊழலைப் பொருத்தவரையில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஓட்டை என்பது ஒரு விளைவு தான் – இந்த விளைவுக்கான காரணம் வேறு.
தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய ஆரம்ப காலத்தில் – ஏன் இன்றும் அதியமான் போன்றவர்கள் கூட – அதற்கான காரணமாக முன்வைக்கப் பட்டது பொதுத்துறையின் திறமையின்மை. இவர்கள் முதலீடு செய்யும் பலமும், தொழில் நுட்பத் திறனும், வாடிக்கையாளார் சேவையிலும் பொதுத்துறை நிறுவனங்கள் பலமடங்கு பின்தங்கியிருப்பதாகவும், இதனால் தான் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும், இதற்குத் தனியார்களை அனுமதிப்பதே ஒரே தீர்வு என்றும் சொன்னார்கள்.
ஆனால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையு இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது. அப்படியிருக்கும் போது, தனியார் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸுக்கும் கெயின்ஸுக்கும் பிரிட்டிஷ் கேஸுக்கும் இந்த ஒப்பந்தத்தை அளிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது எங்கிருந்து வந்தது?
ஊழல் பிறக்கும் இடம் இது தான். இப்போது அம்பலமாகியிருக்கும் ரிலையன்ஸ் ஊழல் என்பது எதார்த்தத்தில் பிரதானமான ஊழலின் நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு முறைகேடு. பிரதானமான ஊழல் அப்படியே இருக்கும் போது இந்த நடைமுறைக் கோளாறையே மொத்த ஊழலாகப் பார்க்கச் சொல்வதென்பது ஆபத்தானது மட்டுமல்ல – மக்களை ஏமாற்றுவதும் கூட. இதைத் தான் அண்ணா ஹசாரே உள்ளிட்ட திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகள் செய்கிறார்கள்.
ஆக, நாட்டுக்கும் நாட்டு மக்களும் சொந்தமான இயற்கை வளங்களைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கும் படையல் போட்டு வைத்து விட்டு அதைப் பொறுக்கித் தின்ன வரும் முதலாளிகளுக்கு இடைஞ்சல் இல்லாத நடைமுறையை மேற்கொள்வது தான் ஊழலற்ற நல்ல நிர்வாகம் (good governance) என்கிறார்கள். இந்தக் கூச்சலில் வளங்கள் கொள்ளை போவதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அண்ணா ஹசாரே போன்ற கோமாளிகளின் கூத்துகள் பயன்படுகின்றன.
ஆக, உண்மையாகவே ஊழல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் – அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் தேசபக்தியும் கொண்டவர்கள், அதற்கு ஊற்றுமூலமாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியதைத் தவிற வேறு வழியொன்றும் இல்லை என்பதற்கு நேரடி சாட்சியாய் ரிலையன்ஸ் ஊழலே இருக்கிறது.
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Friday, July 8, 2011
ஏன் இந்த வேண்டாதா வேலை ?
உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி:
""உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை,'' என, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 ஆயிரத்து 414 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களில், 794 பேர் பெண்கள். தமிழகத்தில், 221 சட்டசபை தொகுதிகளில் மனுக்கள் பெற்றுள்ளோம். மீதமுள்ள 13 தொகுதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும்.
அடுத்த மாதம், நேர்காணல் நடத்தப்பட்டு, இறுதிப் பட்டியல் தலைமைக்கு விரைவில் அனுப்பப்படும். தமிழகத்தில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 14 ஆயிரத்து 104 பேர் உள்ளனர். இவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு, உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களை அதிகம் பங்கேற்க வைப்பதற்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும்.
உள்ளாட்சித் தேர்தலில், இளைஞர் காங்கிரசுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் என, கட்சி தலைமையிடம் வலியுறுத்துகிறோம். "கூட்டணி குறித்து பேசும் தகுதி இளைஞர் காங்கிரசுக்கு இல்லை' என, தங்கபாலு கூறுவது சரியில்லை. இக்கருத்தை கூறுவதற்கு, அவருக்குத் தான் தகுதியில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனம் அடைய, தங்கபாலுவே காரணம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை. இவ்வாறு யுவராஜா கூறினார்.
""உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை,'' என, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 ஆயிரத்து 414 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களில், 794 பேர் பெண்கள். தமிழகத்தில், 221 சட்டசபை தொகுதிகளில் மனுக்கள் பெற்றுள்ளோம். மீதமுள்ள 13 தொகுதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும்.
அடுத்த மாதம், நேர்காணல் நடத்தப்பட்டு, இறுதிப் பட்டியல் தலைமைக்கு விரைவில் அனுப்பப்படும். தமிழகத்தில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 14 ஆயிரத்து 104 பேர் உள்ளனர். இவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு, உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களை அதிகம் பங்கேற்க வைப்பதற்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும்.
உள்ளாட்சித் தேர்தலில், இளைஞர் காங்கிரசுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் என, கட்சி தலைமையிடம் வலியுறுத்துகிறோம். "கூட்டணி குறித்து பேசும் தகுதி இளைஞர் காங்கிரசுக்கு இல்லை' என, தங்கபாலு கூறுவது சரியில்லை. இக்கருத்தை கூறுவதற்கு, அவருக்குத் தான் தகுதியில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனம் அடைய, தங்கபாலுவே காரணம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை. இவ்வாறு யுவராஜா கூறினார்.
Thursday, April 28, 2011
Trichy N.Shiva MP
என் ஊர்
"தி.மு.க.வி்ன் தாலாட்டுத் தொட்டில் திருச்சி !"
''பழமையை இழக்காமல் புதுமை பூசிக்கொள்ளும் அழகிய நகரம் எங்கள் திருச்சி. பிறந்தது, தவழ்ந்தது, ஓடி விளையாடியது, படித்தது, அவசர நிலைக் காலத்தில் 'மிசா’ சட்டத்தில் கைதாகும் வரை வாழ்ந்தது என என் வாழ்வில் எல்லாமே திருச்சிதான். அங்கு கீழ ஆண்டார் வீதிக்காரன் நான்!
திருச்சியில் உள்ள அனைத்து சாமிகளின் திருவீதி உலாக்களும் எங்கள் வீதியிலும் பயணிக்கும். மலைக்கோட்டையின் இரண்டாவது பிராகார வீதி இது. தைப் பூசம் அன்று இரவு முழுவதும் தெருவே விழித்து இருக்கும். விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணிக்கு பட்டாம்பூச்சிக் கூட்டம் பறக்கத் தொடங்கி 10 மணிக்கு அடங்கிவிடும். அருகில் உள்ள சாவித்திரி வித்தியாசாலா பள்ளி, சீத்தா லட்சுமி ராமசாமி கல்லூரிக்குச் செல்லும் இளம்பெண்களின் கூட்டம்தான் அது. நாங்கள் படித்த இ.ஆர். மேல்நிலைப் பள்ளிக்கும் அதுதான் வழி!
பள்ளிக் காலம் வரை அம்மாதான் என்னை வழிநடத்தினார்கள். திருவரங்கம் கோயிலுக்கு நடத்தியே அழைத்துப் போவார்கள். பழைய காவிரிப் பாலத்தில் நடக்கும்போது கீழே சுழித்துக்கொண்டு ஓடும் நீரின் சுழற்சி தந்த அச்சம் இன்னும் நெஞ்சில் இருக்கிறது. திருச்சியின் கோயில்கள் சிறப்பு மிக்கவை மட்டும் அல்ல; வித்தியாசமானவையும் கூட! புராண சிறப்புமிக்க தாயுமானவர் கோயில், நீர் சூழ்ந்த திருவானைக்கா, வானுயர்ந்த திருவரங்கம், திறந்த நிலையில் இருக்கும் வெக்காளி அம்மன் கோயில் என இங்கு அமைந்து இருக்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் தனி மகத்துவம் உண்டு!
வரலாற்றோடு மிக நெருக்கமான ஊர் திருச்சி. குறிப்பாக, திராவிட இயக்க வரலாற்றில் திருச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. பெரியார், தான் பிறந்த மண்ணுக்கு இணையாக நேசித்த ஊர் இது. 1938-ல் பட்டுக்கோட்டை அழகிரி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கிய இடம். தேர்தலில் போட்டியிடுவது என தி.மு.க. முடிவு எடுத்த இடம். அண்ணா முதல்வராகி முதன்முதலாக வந்த இடம். கலைஞர் முதன்முதலாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் என திராவிட இயக்க வரலாற்றில் திருச்சிக்கு அழுத்தமான முத்திரைகள் உண்டு!
என் வாழ்வின் வசந்த காலம், கல்லூரிக் காலம். குப்புசாமி, சேதுராமன், சின்னசாமி, ராமலிங்கம், தமிழிசை அரசன், பாபு, ஜான், சோமு என நண்பர்கள் கூட்டத்தோடு திருச்சியை என் கால்களால் அளந்த காலம். அந்நாட்களில் சிங்காரத் தோப்பில் 'மெட்ரோ ஹோட்டல்’ என்று ஓர் உணவகம் உண்டு. மூணு சமோசா, ஒரு டீ 30 பைசா. சாயங்கால நேரங்களில் அங்கு சாப்பிட்டுவிட்டு சைக்கிளை எடுத்தால், இரண்டாவது சுற்றை நாங்கள் முடிக்கும்போது கடை வீதியில் கடைகளின் கதவுகளை அடைக்கத் தொடங்கி இருப்பார்கள். பாதி நேரம் வீதியில், பாதி நேரம் திரையரங்குகளில் என்று கழிந்த காலம் அது. 'அருணா’விலும் 'பிளாஸா’விலும் ஆங்கிலப் படங்கள் ஓடும். 'கெயிட்டி’யில் இந்திப் படங்கள் ஓடும். 'முருகனி’ல் பழைய படங்கள் ஓடும். பின்னாளில் ஊர் உருமாறியபோது 'ராஜா’, 'ஜுபிடர்’, 'பிரபாத்’, 'பிளாசா’ தியேட்டர்கள் இடிக்கப்பட்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவை வெறும் சினிமா கொட்டகைகளா... வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருந்த இடங்கள் அல்லவா?
ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீர் வீசி விளையாடும் நிகழ்ச்சி வாணப்பட்டரை மாரியம்மன் தேரோட்டத்தின் போது நடக்கும். அப்போது எல்லாம் காலை 7 மணிக்குக் கிளம்பும் தேர் ஆண்டார் வீதிக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட மதியம் 2 மணி ஆகிவிடும். இப்போது எல்லாம் காலை 10 மணிக்கே முழு பிராகாரமும் சுற்றி முடித்து தேர் நிலை திரும்பிவிடுவதாகச் சொல்கிறார்கள். காரணம், ஊர் கூடி தேர் இழுப்பது இல்லை. இயந்திரங்கள் உந்திச் செல்கின்றன. தோழமையோடு மஞ்சள் நீர் வீசி விளையாடுகிற ஆண்களும் பெண்களும் இப்போது இல்லை!
ஊர் உருவம் மாறியிருக்கிறது. விலகாமல் தொடர்கின்ற அம்மாவின் நினைவுகளைப்போலவே, நான் பிறந்து வளர்ந்த வசந்தராயம் பிள்ளை சந்து ஆறாம் இலக்கம் உள்ள வீடு மட்டும் இன்னும் அப்படியே உருமாறாமல் இருக்கிறது. அதேபோலவே, எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் என் ஊரின் மீது எனக்கு உள்ள பற்றும் அன்பும் மாறாது!
தங்கள் ஊர் மீது பலருக்கும் ஆசை இருக்கலாம். நான்கொண்டது காதல். அது அழியாதது. பலர் அறியாதது!
"தி.மு.க.வி்ன் தாலாட்டுத் தொட்டில் திருச்சி !"
''பழமையை இழக்காமல் புதுமை பூசிக்கொள்ளும் அழகிய நகரம் எங்கள் திருச்சி. பிறந்தது, தவழ்ந்தது, ஓடி விளையாடியது, படித்தது, அவசர நிலைக் காலத்தில் 'மிசா’ சட்டத்தில் கைதாகும் வரை வாழ்ந்தது என என் வாழ்வில் எல்லாமே திருச்சிதான். அங்கு கீழ ஆண்டார் வீதிக்காரன் நான்!
திருச்சியில் உள்ள அனைத்து சாமிகளின் திருவீதி உலாக்களும் எங்கள் வீதியிலும் பயணிக்கும். மலைக்கோட்டையின் இரண்டாவது பிராகார வீதி இது. தைப் பூசம் அன்று இரவு முழுவதும் தெருவே விழித்து இருக்கும். விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணிக்கு பட்டாம்பூச்சிக் கூட்டம் பறக்கத் தொடங்கி 10 மணிக்கு அடங்கிவிடும். அருகில் உள்ள சாவித்திரி வித்தியாசாலா பள்ளி, சீத்தா லட்சுமி ராமசாமி கல்லூரிக்குச் செல்லும் இளம்பெண்களின் கூட்டம்தான் அது. நாங்கள் படித்த இ.ஆர். மேல்நிலைப் பள்ளிக்கும் அதுதான் வழி!
பள்ளிக் காலம் வரை அம்மாதான் என்னை வழிநடத்தினார்கள். திருவரங்கம் கோயிலுக்கு நடத்தியே அழைத்துப் போவார்கள். பழைய காவிரிப் பாலத்தில் நடக்கும்போது கீழே சுழித்துக்கொண்டு ஓடும் நீரின் சுழற்சி தந்த அச்சம் இன்னும் நெஞ்சில் இருக்கிறது. திருச்சியின் கோயில்கள் சிறப்பு மிக்கவை மட்டும் அல்ல; வித்தியாசமானவையும் கூட! புராண சிறப்புமிக்க தாயுமானவர் கோயில், நீர் சூழ்ந்த திருவானைக்கா, வானுயர்ந்த திருவரங்கம், திறந்த நிலையில் இருக்கும் வெக்காளி அம்மன் கோயில் என இங்கு அமைந்து இருக்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் தனி மகத்துவம் உண்டு!
வரலாற்றோடு மிக நெருக்கமான ஊர் திருச்சி. குறிப்பாக, திராவிட இயக்க வரலாற்றில் திருச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. பெரியார், தான் பிறந்த மண்ணுக்கு இணையாக நேசித்த ஊர் இது. 1938-ல் பட்டுக்கோட்டை அழகிரி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கிய இடம். தேர்தலில் போட்டியிடுவது என தி.மு.க. முடிவு எடுத்த இடம். அண்ணா முதல்வராகி முதன்முதலாக வந்த இடம். கலைஞர் முதன்முதலாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் என திராவிட இயக்க வரலாற்றில் திருச்சிக்கு அழுத்தமான முத்திரைகள் உண்டு!
என் வாழ்வின் வசந்த காலம், கல்லூரிக் காலம். குப்புசாமி, சேதுராமன், சின்னசாமி, ராமலிங்கம், தமிழிசை அரசன், பாபு, ஜான், சோமு என நண்பர்கள் கூட்டத்தோடு திருச்சியை என் கால்களால் அளந்த காலம். அந்நாட்களில் சிங்காரத் தோப்பில் 'மெட்ரோ ஹோட்டல்’ என்று ஓர் உணவகம் உண்டு. மூணு சமோசா, ஒரு டீ 30 பைசா. சாயங்கால நேரங்களில் அங்கு சாப்பிட்டுவிட்டு சைக்கிளை எடுத்தால், இரண்டாவது சுற்றை நாங்கள் முடிக்கும்போது கடை வீதியில் கடைகளின் கதவுகளை அடைக்கத் தொடங்கி இருப்பார்கள். பாதி நேரம் வீதியில், பாதி நேரம் திரையரங்குகளில் என்று கழிந்த காலம் அது. 'அருணா’விலும் 'பிளாஸா’விலும் ஆங்கிலப் படங்கள் ஓடும். 'கெயிட்டி’யில் இந்திப் படங்கள் ஓடும். 'முருகனி’ல் பழைய படங்கள் ஓடும். பின்னாளில் ஊர் உருமாறியபோது 'ராஜா’, 'ஜுபிடர்’, 'பிரபாத்’, 'பிளாசா’ தியேட்டர்கள் இடிக்கப்பட்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவை வெறும் சினிமா கொட்டகைகளா... வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருந்த இடங்கள் அல்லவா?
ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீர் வீசி விளையாடும் நிகழ்ச்சி வாணப்பட்டரை மாரியம்மன் தேரோட்டத்தின் போது நடக்கும். அப்போது எல்லாம் காலை 7 மணிக்குக் கிளம்பும் தேர் ஆண்டார் வீதிக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட மதியம் 2 மணி ஆகிவிடும். இப்போது எல்லாம் காலை 10 மணிக்கே முழு பிராகாரமும் சுற்றி முடித்து தேர் நிலை திரும்பிவிடுவதாகச் சொல்கிறார்கள். காரணம், ஊர் கூடி தேர் இழுப்பது இல்லை. இயந்திரங்கள் உந்திச் செல்கின்றன. தோழமையோடு மஞ்சள் நீர் வீசி விளையாடுகிற ஆண்களும் பெண்களும் இப்போது இல்லை!
ஊர் உருவம் மாறியிருக்கிறது. விலகாமல் தொடர்கின்ற அம்மாவின் நினைவுகளைப்போலவே, நான் பிறந்து வளர்ந்த வசந்தராயம் பிள்ளை சந்து ஆறாம் இலக்கம் உள்ள வீடு மட்டும் இன்னும் அப்படியே உருமாறாமல் இருக்கிறது. அதேபோலவே, எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் என் ஊரின் மீது எனக்கு உள்ள பற்றும் அன்பும் மாறாது!
தங்கள் ஊர் மீது பலருக்கும் ஆசை இருக்கலாம். நான்கொண்டது காதல். அது அழியாதது. பலர் அறியாதது!
Thursday, April 7, 2011
'' 'தமிழர்களே... தமிழர்களே!
ஸ்பெக்ட்ரம் தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்!
உஷார் உடன்பிறப்பு
'டால்மியா’ தங்கவேலு... இவரது பேச்சும் மூச்சும் கறுப்பு சிவப்புத£ன்! சேலம் மாவட்டத்தில் உள்ள செட்டிச்சாவடி கிராமம் தங்கவேலுவின் சொந்த ஊர். கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து, காலாட்டியபடியே தி.மு.க-வுக்காக வாய்ஸ் கொடுக்கிறார்!
'' 'தமிழர்களே... தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகத்தான் நான் மிதப்பேன். நீங்கள் அதில் ஏறிப் பயணம் செய்யலாம். கவிழ்த்துவிட மாட்டேன்! தமிழர்களே... தமிழர்களே... நீங்கள் பாறையில் தூக்கி அடித்தாலும் சிதறு தேங்காயாகச் சிதறுவேன். அதை எடுத்து நீங்கள் சாப்பிடலாம்!’ - இது ஏதோ தலைவர் கலைஞரின் வார்த்தை விளையாட்டோ, திரைப்பட வசனமோ அல்ல. அவரது வாழ்க்கை. இதுதான் இந்தத் தமிழ்நாட்டின் 60 ஆண்டு கால சரித்திரம்!
தலைவர் கலைஞருடன் ஒப்பிடுவதற்கேனும் வேறு ஒரு தலைவர் மற்ற கட்சிகளில் உண்டா? பதவிக்காக மட்டும் தி.மு.க இல்லை. எமர்ஜென்சி என்னும் எமன் இந்தியாவை வளைத்தபோது, தமிழகத்தை அந்தக் கொடுங் கரம் வளைக்காமல் தடுத்தவர் கலைஞர். பதவி ஆசை இருந்து இருந்தால், அன்றைய பிரதமர் சொன்னதற்குத் தலையை ஆட்டிக்கொண்டு தமிழக முதல்வராக அவரால் தொடர்ந்திருக்க முடியும். 91-ம் ஆண்டு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி, மறுபடியும் கலைஞர் ஆட்சியைக் கலைத்தார்கள். வெளியூர்ப் பயணத் தின்போது ஹோட்டல் அறையைக் காலி செய்யும் மனநிலையில் எந்தக் கவலை யும் இல்லாமல் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கி யவர் கலைஞர். அதனால்தான் 'தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்றாலும், அமைச்சராகப் பணியாற்று என்றாலும், இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன்தான் என் தம்பி கருணாநிதி!’ என்றார் பேரறிஞர் அண்ணா!
இப்படிப்பட்ட தலைவரை ஸ்பெக்ட்ரம் பிரச்னையை மட்டுமே வைத்துக் காலி செய்துவிடலாம் என்று சில கருங்காலிகள் திட்டமிடுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பொறுத்தவரை, அது ஊழலே கிடையாது. பொதுமக்கள் அனைவருமே சகாய விலையில் செல்போன் வசதியை உபயோகிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகப் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதால் ஏற்பட்ட சிறு சிக்கல். 1.76 லட்சம் கோடியை ஆ.ராசா அபேஸ் செய்துவிட்டார் என்பதுபோலப் பலர் பொறாமையில் புகார் சொல்கிறார்கள். அதாவது, இந்த அளவுக்கு லாபம் அடைந்து இருக்க முடியும் என்பதுதான் அந்தக் கணக்கே தவிர, மற்றபடி யாரும் கன்டெய்னரில் அடுக்கி, கப்பலில் அவ்வளவு கோடி கரன்ஸியைக் கடத்திவிடவில்லை. அம்பானி சகோதரர்களது மேஜையில் இருந்த செல் போனை, கிழங்கு விற்கிற கிழவியின் இடுப்பில் மாட்டிவிட்டது எங்களது தயாநிதி மாறனும் ஆ.ராசாவும் அல்லவா?
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான். பெரிதாக ஒரு நல்லது நடக்கும்போது, சின்னக் குறைகளைக் கண்டுகொண்டு கைது செய்யக் கூடாது!
ஜெயலலிதா ஊழல் செய்யாதவரா... பணம் பதுக்காதவரா? பணத்தைப் பார்த்தால், முகத்தைத் திருப்பிக்கொள்பவரா? பெங்களூரில் நடக்கும் வழக்கு அவர் உத்தமி அல்ல என்பதைச் சொல்லும். 24 வயதுப் பையனை வளர்ப்பு மகனாகத் தத்து எடுத்து, வளமான கல்யாணம் நடத்தி, பல கோடி மதிப்புள்ள நகைகளை மாட்டி, அவரும் அவரது தோழியும் நடந்து வந்த காட்சியை இன்னமும் தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.
வீட்டுக்கு வீடு இலவச டி.வி, கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடையில் அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் - இவை எல்லாம் கொண்டுவந்த கலைஞரை தமிழ்நாட்டு மக்கள் கடவுளாகக் கொண்டாடுகிறார்கள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஜெயலலிதா, ஸ்பெக்ட்ரமைக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறார்.
எம்.ஜி.ஆர். காலத்தில்கூட கிராமங்கள் இரட்டை இலையின் கோட்டையாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அனைத்துக் கிராமங்களிலும் உதயசூரியன் மட்டுமே இருக்கிறான். இந்த மாற்றத்தை கலைஞர் எப்படிச் சாதித்தார்? அவர்களுக்கு நல்லது செய்ததன் மூலமாக, மக்களே மனம் மாறிவிட்டார்கள். கிராமத்து மக்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால்கூட 'மகராசனா இரு’ என்று மனசு நிறைந்து வாழ்த்துவார்கள். அந்த அளவுக்கு நல்லவர்கள். நன்றி மறக்காதவர்கள். அந்த மக்கள் கேட்காமலேயே வாரி வழங்கி இருக்கும் கலைஞரை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவார்களா?
எதிரிகளை வீழ்த்த வேண்டுமானால், பலசாலிகளை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் தலைவர் கலைஞர் செய்திருக்கிறார். கலைஞரின் வியூகங்களை ஆயிரம் ஜெயலலிதாக்கள் வந்தாலும் வீழ்த்த முடியாது!''
உஷார் உடன்பிறப்பு
'டால்மியா’ தங்கவேலு... இவரது பேச்சும் மூச்சும் கறுப்பு சிவப்புத£ன்! சேலம் மாவட்டத்தில் உள்ள செட்டிச்சாவடி கிராமம் தங்கவேலுவின் சொந்த ஊர். கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து, காலாட்டியபடியே தி.மு.க-வுக்காக வாய்ஸ் கொடுக்கிறார்!
'' 'தமிழர்களே... தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகத்தான் நான் மிதப்பேன். நீங்கள் அதில் ஏறிப் பயணம் செய்யலாம். கவிழ்த்துவிட மாட்டேன்! தமிழர்களே... தமிழர்களே... நீங்கள் பாறையில் தூக்கி அடித்தாலும் சிதறு தேங்காயாகச் சிதறுவேன். அதை எடுத்து நீங்கள் சாப்பிடலாம்!’ - இது ஏதோ தலைவர் கலைஞரின் வார்த்தை விளையாட்டோ, திரைப்பட வசனமோ அல்ல. அவரது வாழ்க்கை. இதுதான் இந்தத் தமிழ்நாட்டின் 60 ஆண்டு கால சரித்திரம்!
தலைவர் கலைஞருடன் ஒப்பிடுவதற்கேனும் வேறு ஒரு தலைவர் மற்ற கட்சிகளில் உண்டா? பதவிக்காக மட்டும் தி.மு.க இல்லை. எமர்ஜென்சி என்னும் எமன் இந்தியாவை வளைத்தபோது, தமிழகத்தை அந்தக் கொடுங் கரம் வளைக்காமல் தடுத்தவர் கலைஞர். பதவி ஆசை இருந்து இருந்தால், அன்றைய பிரதமர் சொன்னதற்குத் தலையை ஆட்டிக்கொண்டு தமிழக முதல்வராக அவரால் தொடர்ந்திருக்க முடியும். 91-ம் ஆண்டு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி, மறுபடியும் கலைஞர் ஆட்சியைக் கலைத்தார்கள். வெளியூர்ப் பயணத் தின்போது ஹோட்டல் அறையைக் காலி செய்யும் மனநிலையில் எந்தக் கவலை யும் இல்லாமல் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கி யவர் கலைஞர். அதனால்தான் 'தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்றாலும், அமைச்சராகப் பணியாற்று என்றாலும், இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன்தான் என் தம்பி கருணாநிதி!’ என்றார் பேரறிஞர் அண்ணா!
இப்படிப்பட்ட தலைவரை ஸ்பெக்ட்ரம் பிரச்னையை மட்டுமே வைத்துக் காலி செய்துவிடலாம் என்று சில கருங்காலிகள் திட்டமிடுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பொறுத்தவரை, அது ஊழலே கிடையாது. பொதுமக்கள் அனைவருமே சகாய விலையில் செல்போன் வசதியை உபயோகிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகப் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதால் ஏற்பட்ட சிறு சிக்கல். 1.76 லட்சம் கோடியை ஆ.ராசா அபேஸ் செய்துவிட்டார் என்பதுபோலப் பலர் பொறாமையில் புகார் சொல்கிறார்கள். அதாவது, இந்த அளவுக்கு லாபம் அடைந்து இருக்க முடியும் என்பதுதான் அந்தக் கணக்கே தவிர, மற்றபடி யாரும் கன்டெய்னரில் அடுக்கி, கப்பலில் அவ்வளவு கோடி கரன்ஸியைக் கடத்திவிடவில்லை. அம்பானி சகோதரர்களது மேஜையில் இருந்த செல் போனை, கிழங்கு விற்கிற கிழவியின் இடுப்பில் மாட்டிவிட்டது எங்களது தயாநிதி மாறனும் ஆ.ராசாவும் அல்லவா?
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான். பெரிதாக ஒரு நல்லது நடக்கும்போது, சின்னக் குறைகளைக் கண்டுகொண்டு கைது செய்யக் கூடாது!
ஜெயலலிதா ஊழல் செய்யாதவரா... பணம் பதுக்காதவரா? பணத்தைப் பார்த்தால், முகத்தைத் திருப்பிக்கொள்பவரா? பெங்களூரில் நடக்கும் வழக்கு அவர் உத்தமி அல்ல என்பதைச் சொல்லும். 24 வயதுப் பையனை வளர்ப்பு மகனாகத் தத்து எடுத்து, வளமான கல்யாணம் நடத்தி, பல கோடி மதிப்புள்ள நகைகளை மாட்டி, அவரும் அவரது தோழியும் நடந்து வந்த காட்சியை இன்னமும் தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.
வீட்டுக்கு வீடு இலவச டி.வி, கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடையில் அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் - இவை எல்லாம் கொண்டுவந்த கலைஞரை தமிழ்நாட்டு மக்கள் கடவுளாகக் கொண்டாடுகிறார்கள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஜெயலலிதா, ஸ்பெக்ட்ரமைக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறார்.
எம்.ஜி.ஆர். காலத்தில்கூட கிராமங்கள் இரட்டை இலையின் கோட்டையாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அனைத்துக் கிராமங்களிலும் உதயசூரியன் மட்டுமே இருக்கிறான். இந்த மாற்றத்தை கலைஞர் எப்படிச் சாதித்தார்? அவர்களுக்கு நல்லது செய்ததன் மூலமாக, மக்களே மனம் மாறிவிட்டார்கள். கிராமத்து மக்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால்கூட 'மகராசனா இரு’ என்று மனசு நிறைந்து வாழ்த்துவார்கள். அந்த அளவுக்கு நல்லவர்கள். நன்றி மறக்காதவர்கள். அந்த மக்கள் கேட்காமலேயே வாரி வழங்கி இருக்கும் கலைஞரை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவார்களா?
எதிரிகளை வீழ்த்த வேண்டுமானால், பலசாலிகளை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் தலைவர் கலைஞர் செய்திருக்கிறார். கலைஞரின் வியூகங்களை ஆயிரம் ஜெயலலிதாக்கள் வந்தாலும் வீழ்த்த முடியாது!''
Monday, March 28, 2011
நான் ஏன் பிறந்தேன்’... எம்.ஜி.ஆ
'நான் ஏன் பிறந்தேன்’... எம்.ஜி.ஆரால் விகடன் இதழில் எழுதப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். அந்தத் தொடரில் இருந்து சில பகுதிகள் இங்கே...
1957-ம் ஆண்டின்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கழகத்துக்கு என்று உதவி செய்ய, பிரபல பத்திரிகைகளோ, புகழ் பெற்ற பெரியவர்களோ இல்லை. கழகத்தின் கையில் பணமும் இல்லை. பதவிகளும் கிடையா. வியாபாரிகளோ, மில் உரிமையாளர்கள், மிராசுதாரர்கள், மடாதிபதிகள் போன்றவர்களோ, கான்ட்ராக்டர் போன்றவர்களோ பணம் கொடுக்கத் தயாராக இல்லை.
எனவே, ஆடம்பரமாகச் செலவு செய்யப் பணமும் இல்லை. கழகத்தின் கொள்கையை விளம்பரப்படுத்த நாளேடுகள் போன்றவற்றின் உதவியும் இல்லை. அப்படிப்பட்ட நெருக்கடி நிலையில், இன்றைய தமிழக அமைச்சர்களில் ஒருவரான மாண்புமிகு திரு. ப.உ.சண்முகம் அவர்கள், தனது தொகுதியில் தேர்தலுக்கு நின்றார். அண்ணாவின் தம்பிக்குரிய நல்ல தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று, கழகக் கோட்பாடுகளில் மிகமிக நெருக்க உணர்வுகொண்டு இருந்தார். இந்த நண்பர் எப்படியும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் அமர வேண்டும் என்று பெரிதும் ஆசைகொண்டேன். நான் அன்று அவருக்குப் பணம் கொடுக்கும் வசதியில் இருக்க வில்லை. அவருக்காக வாக்குகள் கேட்டு மக்களை ஈர்க்க முயலும் ஒரே ஒரு சக்திதான், அந்தத் தொண்டைச் செய்யும் வசதி மட்டும்தான் என்னிடம் இருந்தது. அவர்களுக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற பேராவலில் அவரிடம் நானே வலியச் சென்று கேட்டேன். அவர் எப்போதும் போல் சிரித்தவாறே சொன்னார், ''இந்தத் தேர்தல் நமது கழகத்துக்கு முதல் தேர்தல் அனுபவமாகும்! இதில் நாம் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது கழகத்துக்கு என்று தனிச் சின்னமே தரப்படவில்லை. அந்தத் தகுதி இப்போது நமக்கு இல்லை.
முதலில் அந்தத் தகுதியை நாம் இந்தத் தேர்தலில் பெற்றாக வேண்டும். எனது தொகுதியில் சிக்கல்கள், இடைஞ்சல்கள் அதிகம்தான். எனினும், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன். வெற்றி பெறப் பெரிதும் போராடினாலும் வெற்றி கிட்டாது போலும் என்றிருக்கும் தொகுதிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தொகுதிகளுக்கு நீங்கள் சென்று பிரசாரம் செய்வீர்களானால், அந்த நண்பர்களுக்கும் கழகத்துக்கும் நல்லதோர் உதவி செய்தவர்கள் ஆவீர்கள்!'' என்று சொன்னார். அவருடைய பேச்சு எந்த அளவுக்குப் பக்குவம் நிறைந்து இருந்ததோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக இருந்தது.
தேர்தல் முடிந்தது. கழகத் தோழர்கள் பலர் நல்ல பண்பு இருந்தும் மக்களுக்கு உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருந்தும் தோற்றுவிட்டார்கள். தப்பியவர்களில் திரு. ப.உ.ச. அவர்களும் ஒருவர் என்ற சேதி கிடைத்தது. ஏனோ, மகிழ்ந்தேன். இந்த 15 பேர்களாவது வெற்றி பெற்றார்களே என்பதுதான்!
அடுத்த தேர்தலும் வந்தது. மதிப்புக்குரிய காமராசர் அவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள், '1962-ம் ஆண்டு தேர்தலின் முடிவில் இந்த 15 பேர்களும் தோற்றுவிட்டார்கள் என்ற சேதி வெளியிடப்படும்!’ என்று.
அவருடைய வழக்கம்போல் மக்களைச் சந்தித்தும் தேர்தலில் வெற்றி பெற அவர் செய்ய வேண்டிய தொண்டுகள் அனைத்தையும் புயல்போல் நிறை வேற்றினார். தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் ஒருவரைத் தவிர, மற்ற 14 பேரும் தோற்றுப் போனார்கள்.
தோல்வியிலும் வெற்றியைக் காணும் அமரர் அண்ணாவின் கொள்கை, இதிலும் தோல்வியில் வெற்றியே கண்டது. 14 பேர்களைத் தோற்கடித்தார்கள். ஆனால், அதே சட்டமன்றத்தில் முன்பிருந்த 15 பேர்களுக்குப் பதிலாக 50 பேர்கள் கழகப் பிரதி நிதிகளாக அமர்ந்தார்கள்.
அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த திரு. ப.உ.ச. அவர்கள் சென்னைக்கு வந்தபோது நாங்கள் சந்தித் தோம். அவரைப் பார்ப்பதற்கே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தோளில் பலமாகத் தட்டிய வாறு என்னை இழுத்து அணைத்துக்கொண்டு, அதே சிரிப்போடு உரத்த குரலில் கலகலவென்று வலுவோடு வார்த்தைகள் வெளியே வரும்படி பேசினார்... ''விஷயம் தெரியுமா? நான் தோத்துட்டேன். என்னை எதிர்த்தவர் நல்ல புத்திசாலி. மக்கள்கிட்ட எதெச் சொல்லி, எப்படி நெருங்கினா, ஓட்டு வாங்கலாங்கிறதெ, என்னைக் காட்டிலும் நல்லாத் தெரிஞ்சுவெச்சிருக்கார். அந்தத் தந்திரத்தை சரியாப் பயன்படுத்தி, அருமையா என்னைத் தோற்கடிச்சுட்டார்'' என்றார். நான் அவரையே பார்த்தேன். அது மட்டுமல்ல... 'திருவண்ணாமலையில் ஒரு பொதுக் கூட்டம் போடப் போகிறேன். அதில் வந்து பேச வேண்டும்’ என்றார்.
நான் விரக்தி மன நிலையில் கேட்டேன், ''எதுக்காகக் கூட்டம்? தோற்கடித்தார்களே அந்த மக்களுக்கு நன்றி சொல்லவா?'' என்று.
''தோற்றது உண்மைதான். ஆனால், ஜாமீன் பணத்தைத் திரும்பப் பெறும் அளவுக்கு ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்களே, அந்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?'' - இது சிரிப்போடும், தன்னம்பிக்கையோடும், ஏமாற்றமற்ற வகையிலும் உளமார என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி.
அது மட்டுமல்ல, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு சில வாக்குகள் குறைந்ததால்தானே தோற்றேன். அந்த வாக்குகளும் கிடைத்திருக்குமானால், இப்போது எனக்கு அளித்திருக்கும் வாக்காளர்களையும் சேர்த்துப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறியிருப்போம் அல்லவா? அப்போது நாம் காட்டும் நன்றியை இப்போதும் காட்டுவதற்கு நமக்கும் கடமை இருக்கிறது. அதைப் பெற அவர்களுக்கும் உரிமை இருக்கிறது!'' இதையும் அவருக்கே உரித்தான சிரிப்போடுதான் சொன்னார்!
1957-ம் ஆண்டின்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கழகத்துக்கு என்று உதவி செய்ய, பிரபல பத்திரிகைகளோ, புகழ் பெற்ற பெரியவர்களோ இல்லை. கழகத்தின் கையில் பணமும் இல்லை. பதவிகளும் கிடையா. வியாபாரிகளோ, மில் உரிமையாளர்கள், மிராசுதாரர்கள், மடாதிபதிகள் போன்றவர்களோ, கான்ட்ராக்டர் போன்றவர்களோ பணம் கொடுக்கத் தயாராக இல்லை.
எனவே, ஆடம்பரமாகச் செலவு செய்யப் பணமும் இல்லை. கழகத்தின் கொள்கையை விளம்பரப்படுத்த நாளேடுகள் போன்றவற்றின் உதவியும் இல்லை. அப்படிப்பட்ட நெருக்கடி நிலையில், இன்றைய தமிழக அமைச்சர்களில் ஒருவரான மாண்புமிகு திரு. ப.உ.சண்முகம் அவர்கள், தனது தொகுதியில் தேர்தலுக்கு நின்றார். அண்ணாவின் தம்பிக்குரிய நல்ல தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று, கழகக் கோட்பாடுகளில் மிகமிக நெருக்க உணர்வுகொண்டு இருந்தார். இந்த நண்பர் எப்படியும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் அமர வேண்டும் என்று பெரிதும் ஆசைகொண்டேன். நான் அன்று அவருக்குப் பணம் கொடுக்கும் வசதியில் இருக்க வில்லை. அவருக்காக வாக்குகள் கேட்டு மக்களை ஈர்க்க முயலும் ஒரே ஒரு சக்திதான், அந்தத் தொண்டைச் செய்யும் வசதி மட்டும்தான் என்னிடம் இருந்தது. அவர்களுக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற பேராவலில் அவரிடம் நானே வலியச் சென்று கேட்டேன். அவர் எப்போதும் போல் சிரித்தவாறே சொன்னார், ''இந்தத் தேர்தல் நமது கழகத்துக்கு முதல் தேர்தல் அனுபவமாகும்! இதில் நாம் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது கழகத்துக்கு என்று தனிச் சின்னமே தரப்படவில்லை. அந்தத் தகுதி இப்போது நமக்கு இல்லை.
முதலில் அந்தத் தகுதியை நாம் இந்தத் தேர்தலில் பெற்றாக வேண்டும். எனது தொகுதியில் சிக்கல்கள், இடைஞ்சல்கள் அதிகம்தான். எனினும், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன். வெற்றி பெறப் பெரிதும் போராடினாலும் வெற்றி கிட்டாது போலும் என்றிருக்கும் தொகுதிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தொகுதிகளுக்கு நீங்கள் சென்று பிரசாரம் செய்வீர்களானால், அந்த நண்பர்களுக்கும் கழகத்துக்கும் நல்லதோர் உதவி செய்தவர்கள் ஆவீர்கள்!'' என்று சொன்னார். அவருடைய பேச்சு எந்த அளவுக்குப் பக்குவம் நிறைந்து இருந்ததோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக இருந்தது.
தேர்தல் முடிந்தது. கழகத் தோழர்கள் பலர் நல்ல பண்பு இருந்தும் மக்களுக்கு உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருந்தும் தோற்றுவிட்டார்கள். தப்பியவர்களில் திரு. ப.உ.ச. அவர்களும் ஒருவர் என்ற சேதி கிடைத்தது. ஏனோ, மகிழ்ந்தேன். இந்த 15 பேர்களாவது வெற்றி பெற்றார்களே என்பதுதான்!
அடுத்த தேர்தலும் வந்தது. மதிப்புக்குரிய காமராசர் அவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள், '1962-ம் ஆண்டு தேர்தலின் முடிவில் இந்த 15 பேர்களும் தோற்றுவிட்டார்கள் என்ற சேதி வெளியிடப்படும்!’ என்று.
அவருடைய வழக்கம்போல் மக்களைச் சந்தித்தும் தேர்தலில் வெற்றி பெற அவர் செய்ய வேண்டிய தொண்டுகள் அனைத்தையும் புயல்போல் நிறை வேற்றினார். தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் ஒருவரைத் தவிர, மற்ற 14 பேரும் தோற்றுப் போனார்கள்.
தோல்வியிலும் வெற்றியைக் காணும் அமரர் அண்ணாவின் கொள்கை, இதிலும் தோல்வியில் வெற்றியே கண்டது. 14 பேர்களைத் தோற்கடித்தார்கள். ஆனால், அதே சட்டமன்றத்தில் முன்பிருந்த 15 பேர்களுக்குப் பதிலாக 50 பேர்கள் கழகப் பிரதி நிதிகளாக அமர்ந்தார்கள்.
அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த திரு. ப.உ.ச. அவர்கள் சென்னைக்கு வந்தபோது நாங்கள் சந்தித் தோம். அவரைப் பார்ப்பதற்கே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தோளில் பலமாகத் தட்டிய வாறு என்னை இழுத்து அணைத்துக்கொண்டு, அதே சிரிப்போடு உரத்த குரலில் கலகலவென்று வலுவோடு வார்த்தைகள் வெளியே வரும்படி பேசினார்... ''விஷயம் தெரியுமா? நான் தோத்துட்டேன். என்னை எதிர்த்தவர் நல்ல புத்திசாலி. மக்கள்கிட்ட எதெச் சொல்லி, எப்படி நெருங்கினா, ஓட்டு வாங்கலாங்கிறதெ, என்னைக் காட்டிலும் நல்லாத் தெரிஞ்சுவெச்சிருக்கார். அந்தத் தந்திரத்தை சரியாப் பயன்படுத்தி, அருமையா என்னைத் தோற்கடிச்சுட்டார்'' என்றார். நான் அவரையே பார்த்தேன். அது மட்டுமல்ல... 'திருவண்ணாமலையில் ஒரு பொதுக் கூட்டம் போடப் போகிறேன். அதில் வந்து பேச வேண்டும்’ என்றார்.
நான் விரக்தி மன நிலையில் கேட்டேன், ''எதுக்காகக் கூட்டம்? தோற்கடித்தார்களே அந்த மக்களுக்கு நன்றி சொல்லவா?'' என்று.
''தோற்றது உண்மைதான். ஆனால், ஜாமீன் பணத்தைத் திரும்பப் பெறும் அளவுக்கு ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்களே, அந்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?'' - இது சிரிப்போடும், தன்னம்பிக்கையோடும், ஏமாற்றமற்ற வகையிலும் உளமார என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி.
அது மட்டுமல்ல, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு சில வாக்குகள் குறைந்ததால்தானே தோற்றேன். அந்த வாக்குகளும் கிடைத்திருக்குமானால், இப்போது எனக்கு அளித்திருக்கும் வாக்காளர்களையும் சேர்த்துப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறியிருப்போம் அல்லவா? அப்போது நாம் காட்டும் நன்றியை இப்போதும் காட்டுவதற்கு நமக்கும் கடமை இருக்கிறது. அதைப் பெற அவர்களுக்கும் உரிமை இருக்கிறது!'' இதையும் அவருக்கே உரித்தான சிரிப்போடுதான் சொன்னார்!
Saturday, March 19, 2011
எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன?
24 டிசம்பர், 1987 அதிகாலை....
எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன?
'எம்.ஜி.ஆர்..!' -இந்த மூன்றெழுத்தில் தமிழகம் தன் மூச்சையே வைத்திருந்த காலம் உண்டு! மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அந்தத் தங்க மகனின் நினைவும் புகழும் தமிழகத்தில் துளியும் மங்கவில்லை! அவர் பேரைச் சொன்னால், 'மவராசன்' என்று கையெடுத்து வான் நோக்கிக் கும்பிடும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.
பூவாக, பொன்னாக அவரை நெஞ்சில் சுமப்பவர்கள், டிசம்பர் 24-ம் தேதியன்று அவரது 20-வது வருட நினைவு நாளுக்கு அரசாங்கமும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் என்ன மரியாதை செய்யப் போகிறார்கள் என்று காத்திருக்க...
''இத்தனை நாளும் இதயத்தில் பூட்டியிருந்த குமுறல்களை இனியும் உள்ளே
வைத்திருக்க முடியாது!'' என்றபடி நம்முடன் பேச வந்தார் எம்.சி.சுகுமார்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகனான சுகுமார், சிறுவயது தொட்டே எம்.ஜி.ஆருக்குச் செல்லம்.
''கடைசிக் காலத்தில் என் சித்தப்பா நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் அவரை சுதந்திரமாக இயங்கவிடாமல் செய்தார்கள். மாநிலத்துக்கே முதல்வராக, மக்களுக்குத் தெய்வமாக இருந்த அதேசமயம் ராமாவரம் தோட்ட இல்லத்தினுள் அவர் ஒரு அடிமை போல நடத்தப்பட்டார்!'' என்று சொல்லி அதிரவைக்கிறார் எம்.சி.சுகுமார்.
எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை குறிப்புகளாகச் சேகரித்துக் கொண்டிருக்கும் இவர், விரைவில் அதனை வைத்து ஒரு புத்தகம் எழுதவும் தீர்மானித்திருக்கிறார். அந்தப் புத்தகத்தில் எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தை 'அது அவரின் இருண்ட காலம்' என்றே வர்ணிக்கத் தயாராகிறார்!
சென்னை அண்ணாநகரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் சுகுமாரைச் சந்தித்தோம்-
''1984-ம் ஆண்டு மே மாதம்... 4-ம் தேதி... சித்தப்பா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'அவர் உடம்புக்கு என்ன?' என்கிற விஷயம், அவருடைய ரத்த சொந்தமான எனக்கோ என் சகோதர - சகோதரிகளுக்கோ ராமாவரம் தோட்டத் திலிருந்து தெரிவிக்கப்படவில்லை. 'அவருக்கு நரம்புத் தளர்ச்சி' என்று மட்டும் மேம்போக்காகச் சொன்னார்கள். அதன்பிறகு, சித்தப்பா நல்லபடியாக இல்லம் திரும்பினார்.
மீண்டும் செப்டம்பர் மாதத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். அம்மாதம் 20-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரையில் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். பிரபலமான அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு மருத்துவ சிகிச்சையளித்த டாக்டர் மணி என்பவர்தான் சித்தப்பாவை பரிசோதித்து விட்டு, அவருக்கு 'சிறுநீரகக் கோளாறு இருப்பதாக' முதலில் சொன்னார்.
செப்டம்பர் முப்பதாம் தேதியன்று அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி... சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. முதல்வர் என்ற முறையில் அந்த அரசு விழாவில் கலந்துகொள்ள சித்தப்பா கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது அடையாளமான அந்தத் துள்ளல் மறைந்து, உடல் சோர்ந்து போயிருந்தார். தன் உடல்நிலை குறித்து எப்போதுமே பலவீனமான இமேஜ் வராதபடி கவனமாக இருக்கும் அவரே, என்னிடம் கவலையோடு பேசினார்.
நான் டாக்டரிடம் பேசினேன். அப்போ 'சித்தப்பாவுக்கு (எம்.ஜி.ஆருக்கு) சிறுநீரகத்தைக் கட்டாயம் மாற்றியாக வேண்டும்' என்று டாக்டர் என்னிடம் சொன்னார். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த எங்கள் குடும்பம், கடும் பிரார்த்தனையில் ஈடுபட்டது. அடிக்கடி சித்தப்பாவை நாங்கள் அவருடைய வீட்டுக்குப் போய்ப் பார்த்து, உடல்நலம் விசாரித்து வந்தோம். அப்போது எங்களுக்கு அங்கிருந்தவர் களால் ஏற்பட்ட கெடுபிடிகளும், அவமானங்களும் இன்றைக்கு நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது...'' என்று சொல்லி நிறுத்தியவர்... தன் சகோதரி லீலாவதி சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுத்தபோது அனுபவித்த கஷ்டங்களை விவரித்தார்-
''சித்தப்பா உடல்நிலை ரொம்பவே பாதிக்கப்பட்டு, அமெரிக்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும்' என்று சொன்னார்கள்.
இங்கிருக்கும் மருத்துவர்கள் சிலர் அமெரிக்காவில் இருந்த மருத்துவர்களோடு பேசியதில், 'ரத்த சொந்தம் உள்ள ஒருவரிடமிருந்துதான் சிறுநீரகம் பெற வேண்டும். அப்போதுதான் அவரது உடம்பில் இணைந்து அது செயல்பட ஆரம்பிக்கும்' என்று சொன் னார்கள். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே, நாடே போற்ற வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுக்கத் தயாராக நின்றோம். பல்வேறு டெஸ்ட்களின் அடிப் படையில், 'சகோதரி லீலாவதியின் சிறுநீரகம் தான் சித்தப்பாவுக்குப் பொருந்தும்' என முடி வானது.
அதற்காக என் சகோதரி லீலாவதி எந்த நிமிடமும் அமெரிக்காவுக்குக் கிளம்பத் தயா ராக இருந்தார். ஆனால், அவரைப் பலமுறை அலைக்கழித்தே அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்றார்கள்.
அங்கு சித்தப்பா அவ்வளவாக நினைவு இல்லாத நிலையில் இருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வெற்றிகரமாக அது இயங்கத் தொடங்கியது. சித்தப்பா படிப்படியாக முழு நினைவுக்குத் திரும்பினார். அந்தச் சூழ்நிலையில்கூட 'என் சகோதரிதான் அவருக்கு சிறுநீரகத் தானம் வழங்கினார்' என்பதை சித்தப்பாவிடம் சொல் லாமலேயே மறைத்துவிட்டார்கள்.
என் சகோதரியும் அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிவிட்டார்.
உடல்நிலை நன்கு தேறி, சித்தப்பாவும் சென்னைக்கு வந்தார். சென்னையில் அவருக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள்கூடி, உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போதுகூட லீலாவதியைக் கிட்டே அனுமதிக்கவில்லை அவர்கள்.
பிற்பாடு, சித்தப்பாவை வாழ்த்தி அண்ணா பத்திரிகையில் 'வார்த்தை சித்தர்' வலம்புரிஜான் ஒரு கவிதை எழுதி இருந்தார். அதில், சகோதரி லீலாவதியின் பெருந்தன்மையையும் புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்துத் திகைத்துப்போன என் சித்தப்பா எம்.ஜி.ஆர், தன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சீனியரான பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து விசாரித்திருக்கிறார். அவரும், 'ஆமாம், லீலாவதிதான் உங்களுக்கு சிறுநீரகம் தந்தார்' என்று சொல்லி, சித்தப்பா அமெரிக்காவில் இருந்தபோது தமிழகத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் விளக்கியிருக்கிறார். உடனே என் சகோதரியை அழைத்து, நெகிழ்ச்சியோடு தன் நன்றியைப் பகிர்ந்துகொண்டார் சித்தப்பா.
''அதற்கு முன்பு சித்தப்பா சென்னை மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு ரத்தம் தேவை என்றார்கள். நான் பதறியடித்துக்கொண்டு ரத்தம் கொடுக்க ஓடினேன். அப்போது என்னை ரத்தம் கொடுக்கும் இடத்துக்கு அழைத்துப்போன சித்தப்பாவின் மருத்துவர், தேவையே இல்லாமல் என்னை அந்த ஐந்து மாடி கட்டடத்துக்கு மேலும் கீழுமாகக் அலைக்கழித்தார். இறுதியில் ரத்தம் கொடுப்பதற்கு முன்பாக ரத்த அழுத்த சோதனை நடத்தி, 'உங்களுக்கு பிரஷர் இருக்கிறது' என்று சொல்லி, என்னைத் திருப்பி அனுப்பினார்கள். அதன்பிறகும் 'எனக்கு ரத்த அழுத்தம் இல்லை' என்று நிரூபித்து, ரத்தம் கொடுத்தேன். ஆனால், 'அந்த ரத்தம் மேட்ச் ஆகவில்லை' என்று சொல்லி, மூன்று தடவைகளுக்கு மேல் திரும்பத் திரும்ப என்னிடம் ரத்தம் வாங்கினார்கள். இதேபோலவே என் குடும்பத்தினரிடமும் ரத்தம் வாங்கினார்கள். அதாவது, 'சித்தப்பாவுக்கு ஆபத்தான காலகட்டத்தில் ரத்தம் கொடுத்தவர்கள் நாங்கள்தான்' என்று தெரியவந்தால், அவர் எங்கள் மீதான பாசத்தை அதிகப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே எங்களை அலைக்கழித்தார்கள் என்பது பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியவந்தது'' என்று வேதனையோடு நிறுத்திய எம்.சி.சுகுமார்,
''கடைசிக் காலத்தில் தன் தம்பிக்கு நேர்ந்த சோதனைகளை அறிந்த என் அப்பா சக்கரபாணி துடித்த துடிப்பு, இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. 'நான் நெருப்பு வளையத்துக்குள் இருக்கிறேன்...' என்று சித்தப்பா, என் அப்பாவிடம் சொல்லி வருந்தியிருக்கிறார்...'' என்று சொல்லும்போதே கண் கலங்குகிறார்.
''சித்தப்பாவுக்கு என் அப்பாதான் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் சுமைதாங்கியாக இருந்திருக்கிறார். என் அப்பாவை ஆலோசித்தே முக்கிய முடிவுகளை எடுத்தார். 'சொத்து விஷயத்திலும் அப்படி நடந்துவிடக் கூடாது' என்று என் சித்தி ஜானகி அம்மாளை வழிநடத்திய சிலர் நினைத்திருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குடும்பத்தை சித்தப்பாவிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
அப்போலோ மருத்துவமனையில் சித்தப்பா இருந்தபோது, உடல்நலம் விசாரிப்பதற்காக என் அப்பா அங்கே சென்றார். அப்போது அவரைக் கட்டிக்கொண்ட சித்தப்பா, தான் எப்படி ஒரு இக்கட்டான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வருத்தமான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். 'என்னை சுற்றி நானே ஒரு வளையம் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த வளையத்துக்குள் யார் வரவேண்டும், வரக்கூடாது என்பதையெல்லாம்கூட வரையறுத்து வைத்திருந்தேன். ஆனால், அந்த வளையமே இன்றைக்கு என்னை நெருக்கி இழுக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்!
அப்படியென்றால், அதற்கு அர்த்தம் என்ன? 'யாரை நம்பி நான் வளையத்துக்குள் வாழ்ந்து வந்தேனோ, அவர்களே என்னை நிம்மதியாக வாழவிடவில்லை' என்பதுதானே'' என்றவர்,
''என் சித்தப்பாவின் மறைவு தினத்தன்று ராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விதம்விதமான பேச்சுக்கள் இருக்கின்றன. அன்றைக்கு அங்கே நடந்த அந்தக் கொடுமையான விஷயங்களை நாடு இப்போதாவது தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்...'' என்று சொல்லி, பெருமூச்சோடு பேச ஆரம்பித்தார்-
''டிசம்பர் 24, 1987... அதிகாலை... 'சித்தப்பா இறந்துவிட்டார்' என்று எங்களுக்குத் தகவல் வந்தது. குடும்பத்தோடு நாங்களெல்லாம் உடனே புறப் பட்டு ராமாவரம் தோட்டத்துக்கு ஓடினோம். சித்தப்பாவின் படுக்கையறை இருந்த இரண்டாவது தளத்தில் அவருடைய உடல் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இரண்டாவது தளத்துக்குப் போக முயன்றோம். எங்களைத் தடுத்து, கீழ்த்தளத்திலேயே இருக்க வைத்துவிட்டார்கள். இறப்புச் செய்தி கேள்விப்பட்டு திமுதிமுவென கூட்டம் கூடிவிட்டது. கதறல் குரல்கள் ராமாவரம் தோட்டம் முழுவதும் நிரம்பியிருக்க, அதிகாலை மூன்று மணியளவில் அ.தி.மு.க-வின் தற்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அங்கே வந்துவிட்டார். அடுத்த சிறிது நேரத்தில், தன் நாற்பதாண்டு கால உயிர்நண்பரின் முகத்தை கடைசியாக ஒருதடவை பார்க்கக் கலைஞரும் வந்து சேர்ந்தார். அவர்களையும் சித்தப்பாவின் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடல் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக 'எம்பாம்' வேலைகள் நடப்பதாகச் சொல்லி, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை!
நிலைமையை ரசாபாசம் ஆக்க வேண்டாம் என்று எண்ணி கலைஞர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், ஜெயலலிதா விடாப்பிடியாகப் போராடிக் கொண்டிருந்தார். திரைமறைவு வேலை உள்ளே நடக்கிறது என்பதை மட்டும் எங்களாலும் ஜெயலலிதாவாலும் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், தடுப்புகளையெல்லாம் மீறி இரண்டாவது தளத்துக்குச் செல்ல மாடிப்படி அருகே நின்றுகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதிகாலை ஆரம்பித்த இந்தப் போராட்டம் பொழுது விடிந்த பிறகும் நடந்துகொண்டே இருக்க, தோட்டத்தின் பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் சித்தப்பாவின் உடலை ஏற்றி, அவசரஅவசரமாக ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசென்று விட்டார்கள்.
தேசம் போற்ற வாழ்ந்த அந்த மாமனிதரின் உடலை ஏதோ 'கடத்தல் சரக்கு' போல அங்கிருந்தவர்கள் கையாண்டதற்கு இதோ இந்த போட் டோவே ஆதாரம் (அந்தப் படம்... அட்டையிலும்...).
ராமாவரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த லிஃப்ட் மூலம், இறந்துபோன சித்தப்பாவின் உடலை ஸ்ட்ரெச்சர் பலகையில் இறுக்க மாகக் கட்டி, நிற்கிற வாட்டில் வைத்து, அடித்துப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார்கள்! இதற்காக சித்தப்பாவின் உடலை மாடியில் வைத்து- அவரது கால், கைகளைக் கயிற்றால் கட்டி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து, என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பொன்மனச் செம்மலின் உடலை சித்ரவதை செய்வதுபோல கட்டி, வெளியே அவசரஅவசரமாக எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியம் என்ன?
இத்தனைக்கும் சித்தப்பாவின் உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசெல்லப்படும் வரையில், அவர் உடலைப் பொதுமக்கள் பார்வைக்காக அங்கே வைப்பதற்குரிய எந்த முன்னேற்பாடுகளையுமே செய்யவில்லை! காரணம், அங்கிருந்தவர்களின் கவனமெல்லாம் வேறு ஏதோ விஷயங்களில்தான் இருந்திருக்கிறது!
அதுமட்டுமல்ல, அவரது உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, 24-ம் தேதி முழுவதும் ஜானகியம்மாள், சித்தப்பாவின் உடல் அருகில் போகாமலேயே இருந்தார்.
25-ம் தேதி உடல் அடக்கம் செய்யப் பட்டபோதுதான் அவர், சித்தப்பாவின் உடல் அருகே வந்தார். அதுமட்டுமல்ல, அவசர மாக ராமாவரம் தோட்டத்தில் இருந்து சித்தப்பாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு அனுப்பிவைத்த பிறகு, வீட்டில் இருந்த ஜானகி அம்மாள் 'வழக்கறிஞரும் அங்கே போய்விட்டாரா?' என்று திரும்பத்திரும்பக் கேட்டிருக்கிறார். இதை அருகில் இருந்த என் அம்மா மீனாட்சி கவனித்திருக்கிறார். அப்படியென்றால், சித்தப்பா இறந்ததும் வழக்கறிஞரை வைத்து ஜானகி அம்மாளின் ஆலோசகர்களாக இருந்த சிலர் அவசரமாக ஏதோ செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்று தோன்றுகிறதே..! அது என்ன?
சித்தி ஜானகி அம்மாளும் இன்று மறைந்து போய்விட்டார். அவருடைய புகழுக்குக் களங்கம் உண்டாவதுபோல் பேசுவது என் நோக்கமல்ல... அவரை இயக்கியவர்கள் மீதுதான் என் கோபமெல்லாம்!
'சித்தப்பா இறந்துபோவதற்கு முதல்நாள் அவரிடம், ஜானகி அம்மாள் மிகக் கடுமையாக வாக்குவாதம் செய்தார்' என்றும் என்னிடம் தகவல் இருக்கிறது.
சித்தப்பா இறந்தது மாரடைப்பால் என்று சொல்லப்பட்டது. அவருக்கு 69-வது வயது வரையில் இதயநோய் இல்லவே இல்லை. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்வது எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை!'' என்று சொல்லிச் சற்று நிறுத்தியவர், சிறு யோசனைக்குப் பின், ''கடைசிக் காலகட்டங்களில் சித்தப்பா பல நேரங்கள் சிந்தனை தப்பி இருந்ததாகவும், சில ஏற்பாடுகளுக்கு அவர் ஒத்துழைக்க மறுத்த கோபத்தில் அப்போது அவரை எத்தகைய பாராமுகத்தோடு நடத்தினார்கள் என்பதையும் அவருக்குப் பாதுகாப்பாக இருந்த போலீஸார் சொல்லக் கேட்டுக் கண்ணீர் வடித்திருக்கிறேன்!'
எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன?
'எம்.ஜி.ஆர்..!' -இந்த மூன்றெழுத்தில் தமிழகம் தன் மூச்சையே வைத்திருந்த காலம் உண்டு! மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அந்தத் தங்க மகனின் நினைவும் புகழும் தமிழகத்தில் துளியும் மங்கவில்லை! அவர் பேரைச் சொன்னால், 'மவராசன்' என்று கையெடுத்து வான் நோக்கிக் கும்பிடும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.
பூவாக, பொன்னாக அவரை நெஞ்சில் சுமப்பவர்கள், டிசம்பர் 24-ம் தேதியன்று அவரது 20-வது வருட நினைவு நாளுக்கு அரசாங்கமும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் என்ன மரியாதை செய்யப் போகிறார்கள் என்று காத்திருக்க...
''இத்தனை நாளும் இதயத்தில் பூட்டியிருந்த குமுறல்களை இனியும் உள்ளே
வைத்திருக்க முடியாது!'' என்றபடி நம்முடன் பேச வந்தார் எம்.சி.சுகுமார்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகனான சுகுமார், சிறுவயது தொட்டே எம்.ஜி.ஆருக்குச் செல்லம்.
''கடைசிக் காலத்தில் என் சித்தப்பா நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் அவரை சுதந்திரமாக இயங்கவிடாமல் செய்தார்கள். மாநிலத்துக்கே முதல்வராக, மக்களுக்குத் தெய்வமாக இருந்த அதேசமயம் ராமாவரம் தோட்ட இல்லத்தினுள் அவர் ஒரு அடிமை போல நடத்தப்பட்டார்!'' என்று சொல்லி அதிரவைக்கிறார் எம்.சி.சுகுமார்.
எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை குறிப்புகளாகச் சேகரித்துக் கொண்டிருக்கும் இவர், விரைவில் அதனை வைத்து ஒரு புத்தகம் எழுதவும் தீர்மானித்திருக்கிறார். அந்தப் புத்தகத்தில் எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தை 'அது அவரின் இருண்ட காலம்' என்றே வர்ணிக்கத் தயாராகிறார்!
சென்னை அண்ணாநகரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் சுகுமாரைச் சந்தித்தோம்-
''1984-ம் ஆண்டு மே மாதம்... 4-ம் தேதி... சித்தப்பா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'அவர் உடம்புக்கு என்ன?' என்கிற விஷயம், அவருடைய ரத்த சொந்தமான எனக்கோ என் சகோதர - சகோதரிகளுக்கோ ராமாவரம் தோட்டத் திலிருந்து தெரிவிக்கப்படவில்லை. 'அவருக்கு நரம்புத் தளர்ச்சி' என்று மட்டும் மேம்போக்காகச் சொன்னார்கள். அதன்பிறகு, சித்தப்பா நல்லபடியாக இல்லம் திரும்பினார்.
மீண்டும் செப்டம்பர் மாதத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். அம்மாதம் 20-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரையில் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். பிரபலமான அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு மருத்துவ சிகிச்சையளித்த டாக்டர் மணி என்பவர்தான் சித்தப்பாவை பரிசோதித்து விட்டு, அவருக்கு 'சிறுநீரகக் கோளாறு இருப்பதாக' முதலில் சொன்னார்.
செப்டம்பர் முப்பதாம் தேதியன்று அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி... சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. முதல்வர் என்ற முறையில் அந்த அரசு விழாவில் கலந்துகொள்ள சித்தப்பா கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது அடையாளமான அந்தத் துள்ளல் மறைந்து, உடல் சோர்ந்து போயிருந்தார். தன் உடல்நிலை குறித்து எப்போதுமே பலவீனமான இமேஜ் வராதபடி கவனமாக இருக்கும் அவரே, என்னிடம் கவலையோடு பேசினார்.
நான் டாக்டரிடம் பேசினேன். அப்போ 'சித்தப்பாவுக்கு (எம்.ஜி.ஆருக்கு) சிறுநீரகத்தைக் கட்டாயம் மாற்றியாக வேண்டும்' என்று டாக்டர் என்னிடம் சொன்னார். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த எங்கள் குடும்பம், கடும் பிரார்த்தனையில் ஈடுபட்டது. அடிக்கடி சித்தப்பாவை நாங்கள் அவருடைய வீட்டுக்குப் போய்ப் பார்த்து, உடல்நலம் விசாரித்து வந்தோம். அப்போது எங்களுக்கு அங்கிருந்தவர் களால் ஏற்பட்ட கெடுபிடிகளும், அவமானங்களும் இன்றைக்கு நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது...'' என்று சொல்லி நிறுத்தியவர்... தன் சகோதரி லீலாவதி சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுத்தபோது அனுபவித்த கஷ்டங்களை விவரித்தார்-
''சித்தப்பா உடல்நிலை ரொம்பவே பாதிக்கப்பட்டு, அமெரிக்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும்' என்று சொன்னார்கள்.
இங்கிருக்கும் மருத்துவர்கள் சிலர் அமெரிக்காவில் இருந்த மருத்துவர்களோடு பேசியதில், 'ரத்த சொந்தம் உள்ள ஒருவரிடமிருந்துதான் சிறுநீரகம் பெற வேண்டும். அப்போதுதான் அவரது உடம்பில் இணைந்து அது செயல்பட ஆரம்பிக்கும்' என்று சொன் னார்கள். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே, நாடே போற்ற வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுக்கத் தயாராக நின்றோம். பல்வேறு டெஸ்ட்களின் அடிப் படையில், 'சகோதரி லீலாவதியின் சிறுநீரகம் தான் சித்தப்பாவுக்குப் பொருந்தும்' என முடி வானது.
அதற்காக என் சகோதரி லீலாவதி எந்த நிமிடமும் அமெரிக்காவுக்குக் கிளம்பத் தயா ராக இருந்தார். ஆனால், அவரைப் பலமுறை அலைக்கழித்தே அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்றார்கள்.
அங்கு சித்தப்பா அவ்வளவாக நினைவு இல்லாத நிலையில் இருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வெற்றிகரமாக அது இயங்கத் தொடங்கியது. சித்தப்பா படிப்படியாக முழு நினைவுக்குத் திரும்பினார். அந்தச் சூழ்நிலையில்கூட 'என் சகோதரிதான் அவருக்கு சிறுநீரகத் தானம் வழங்கினார்' என்பதை சித்தப்பாவிடம் சொல் லாமலேயே மறைத்துவிட்டார்கள்.
என் சகோதரியும் அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிவிட்டார்.
உடல்நிலை நன்கு தேறி, சித்தப்பாவும் சென்னைக்கு வந்தார். சென்னையில் அவருக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள்கூடி, உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போதுகூட லீலாவதியைக் கிட்டே அனுமதிக்கவில்லை அவர்கள்.
பிற்பாடு, சித்தப்பாவை வாழ்த்தி அண்ணா பத்திரிகையில் 'வார்த்தை சித்தர்' வலம்புரிஜான் ஒரு கவிதை எழுதி இருந்தார். அதில், சகோதரி லீலாவதியின் பெருந்தன்மையையும் புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்துத் திகைத்துப்போன என் சித்தப்பா எம்.ஜி.ஆர், தன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சீனியரான பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து விசாரித்திருக்கிறார். அவரும், 'ஆமாம், லீலாவதிதான் உங்களுக்கு சிறுநீரகம் தந்தார்' என்று சொல்லி, சித்தப்பா அமெரிக்காவில் இருந்தபோது தமிழகத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் விளக்கியிருக்கிறார். உடனே என் சகோதரியை அழைத்து, நெகிழ்ச்சியோடு தன் நன்றியைப் பகிர்ந்துகொண்டார் சித்தப்பா.
''அதற்கு முன்பு சித்தப்பா சென்னை மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு ரத்தம் தேவை என்றார்கள். நான் பதறியடித்துக்கொண்டு ரத்தம் கொடுக்க ஓடினேன். அப்போது என்னை ரத்தம் கொடுக்கும் இடத்துக்கு அழைத்துப்போன சித்தப்பாவின் மருத்துவர், தேவையே இல்லாமல் என்னை அந்த ஐந்து மாடி கட்டடத்துக்கு மேலும் கீழுமாகக் அலைக்கழித்தார். இறுதியில் ரத்தம் கொடுப்பதற்கு முன்பாக ரத்த அழுத்த சோதனை நடத்தி, 'உங்களுக்கு பிரஷர் இருக்கிறது' என்று சொல்லி, என்னைத் திருப்பி அனுப்பினார்கள். அதன்பிறகும் 'எனக்கு ரத்த அழுத்தம் இல்லை' என்று நிரூபித்து, ரத்தம் கொடுத்தேன். ஆனால், 'அந்த ரத்தம் மேட்ச் ஆகவில்லை' என்று சொல்லி, மூன்று தடவைகளுக்கு மேல் திரும்பத் திரும்ப என்னிடம் ரத்தம் வாங்கினார்கள். இதேபோலவே என் குடும்பத்தினரிடமும் ரத்தம் வாங்கினார்கள். அதாவது, 'சித்தப்பாவுக்கு ஆபத்தான காலகட்டத்தில் ரத்தம் கொடுத்தவர்கள் நாங்கள்தான்' என்று தெரியவந்தால், அவர் எங்கள் மீதான பாசத்தை அதிகப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே எங்களை அலைக்கழித்தார்கள் என்பது பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியவந்தது'' என்று வேதனையோடு நிறுத்திய எம்.சி.சுகுமார்,
''கடைசிக் காலத்தில் தன் தம்பிக்கு நேர்ந்த சோதனைகளை அறிந்த என் அப்பா சக்கரபாணி துடித்த துடிப்பு, இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. 'நான் நெருப்பு வளையத்துக்குள் இருக்கிறேன்...' என்று சித்தப்பா, என் அப்பாவிடம் சொல்லி வருந்தியிருக்கிறார்...'' என்று சொல்லும்போதே கண் கலங்குகிறார்.
''சித்தப்பாவுக்கு என் அப்பாதான் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் சுமைதாங்கியாக இருந்திருக்கிறார். என் அப்பாவை ஆலோசித்தே முக்கிய முடிவுகளை எடுத்தார். 'சொத்து விஷயத்திலும் அப்படி நடந்துவிடக் கூடாது' என்று என் சித்தி ஜானகி அம்மாளை வழிநடத்திய சிலர் நினைத்திருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குடும்பத்தை சித்தப்பாவிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
அப்போலோ மருத்துவமனையில் சித்தப்பா இருந்தபோது, உடல்நலம் விசாரிப்பதற்காக என் அப்பா அங்கே சென்றார். அப்போது அவரைக் கட்டிக்கொண்ட சித்தப்பா, தான் எப்படி ஒரு இக்கட்டான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வருத்தமான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். 'என்னை சுற்றி நானே ஒரு வளையம் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த வளையத்துக்குள் யார் வரவேண்டும், வரக்கூடாது என்பதையெல்லாம்கூட வரையறுத்து வைத்திருந்தேன். ஆனால், அந்த வளையமே இன்றைக்கு என்னை நெருக்கி இழுக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்!
அப்படியென்றால், அதற்கு அர்த்தம் என்ன? 'யாரை நம்பி நான் வளையத்துக்குள் வாழ்ந்து வந்தேனோ, அவர்களே என்னை நிம்மதியாக வாழவிடவில்லை' என்பதுதானே'' என்றவர்,
''என் சித்தப்பாவின் மறைவு தினத்தன்று ராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விதம்விதமான பேச்சுக்கள் இருக்கின்றன. அன்றைக்கு அங்கே நடந்த அந்தக் கொடுமையான விஷயங்களை நாடு இப்போதாவது தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்...'' என்று சொல்லி, பெருமூச்சோடு பேச ஆரம்பித்தார்-
''டிசம்பர் 24, 1987... அதிகாலை... 'சித்தப்பா இறந்துவிட்டார்' என்று எங்களுக்குத் தகவல் வந்தது. குடும்பத்தோடு நாங்களெல்லாம் உடனே புறப் பட்டு ராமாவரம் தோட்டத்துக்கு ஓடினோம். சித்தப்பாவின் படுக்கையறை இருந்த இரண்டாவது தளத்தில் அவருடைய உடல் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இரண்டாவது தளத்துக்குப் போக முயன்றோம். எங்களைத் தடுத்து, கீழ்த்தளத்திலேயே இருக்க வைத்துவிட்டார்கள். இறப்புச் செய்தி கேள்விப்பட்டு திமுதிமுவென கூட்டம் கூடிவிட்டது. கதறல் குரல்கள் ராமாவரம் தோட்டம் முழுவதும் நிரம்பியிருக்க, அதிகாலை மூன்று மணியளவில் அ.தி.மு.க-வின் தற்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அங்கே வந்துவிட்டார். அடுத்த சிறிது நேரத்தில், தன் நாற்பதாண்டு கால உயிர்நண்பரின் முகத்தை கடைசியாக ஒருதடவை பார்க்கக் கலைஞரும் வந்து சேர்ந்தார். அவர்களையும் சித்தப்பாவின் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடல் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக 'எம்பாம்' வேலைகள் நடப்பதாகச் சொல்லி, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை!
நிலைமையை ரசாபாசம் ஆக்க வேண்டாம் என்று எண்ணி கலைஞர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், ஜெயலலிதா விடாப்பிடியாகப் போராடிக் கொண்டிருந்தார். திரைமறைவு வேலை உள்ளே நடக்கிறது என்பதை மட்டும் எங்களாலும் ஜெயலலிதாவாலும் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், தடுப்புகளையெல்லாம் மீறி இரண்டாவது தளத்துக்குச் செல்ல மாடிப்படி அருகே நின்றுகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதிகாலை ஆரம்பித்த இந்தப் போராட்டம் பொழுது விடிந்த பிறகும் நடந்துகொண்டே இருக்க, தோட்டத்தின் பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் சித்தப்பாவின் உடலை ஏற்றி, அவசரஅவசரமாக ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசென்று விட்டார்கள்.
தேசம் போற்ற வாழ்ந்த அந்த மாமனிதரின் உடலை ஏதோ 'கடத்தல் சரக்கு' போல அங்கிருந்தவர்கள் கையாண்டதற்கு இதோ இந்த போட் டோவே ஆதாரம் (அந்தப் படம்... அட்டையிலும்...).
ராமாவரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த லிஃப்ட் மூலம், இறந்துபோன சித்தப்பாவின் உடலை ஸ்ட்ரெச்சர் பலகையில் இறுக்க மாகக் கட்டி, நிற்கிற வாட்டில் வைத்து, அடித்துப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார்கள்! இதற்காக சித்தப்பாவின் உடலை மாடியில் வைத்து- அவரது கால், கைகளைக் கயிற்றால் கட்டி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து, என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பொன்மனச் செம்மலின் உடலை சித்ரவதை செய்வதுபோல கட்டி, வெளியே அவசரஅவசரமாக எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியம் என்ன?
இத்தனைக்கும் சித்தப்பாவின் உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசெல்லப்படும் வரையில், அவர் உடலைப் பொதுமக்கள் பார்வைக்காக அங்கே வைப்பதற்குரிய எந்த முன்னேற்பாடுகளையுமே செய்யவில்லை! காரணம், அங்கிருந்தவர்களின் கவனமெல்லாம் வேறு ஏதோ விஷயங்களில்தான் இருந்திருக்கிறது!
அதுமட்டுமல்ல, அவரது உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, 24-ம் தேதி முழுவதும் ஜானகியம்மாள், சித்தப்பாவின் உடல் அருகில் போகாமலேயே இருந்தார்.
25-ம் தேதி உடல் அடக்கம் செய்யப் பட்டபோதுதான் அவர், சித்தப்பாவின் உடல் அருகே வந்தார். அதுமட்டுமல்ல, அவசர மாக ராமாவரம் தோட்டத்தில் இருந்து சித்தப்பாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு அனுப்பிவைத்த பிறகு, வீட்டில் இருந்த ஜானகி அம்மாள் 'வழக்கறிஞரும் அங்கே போய்விட்டாரா?' என்று திரும்பத்திரும்பக் கேட்டிருக்கிறார். இதை அருகில் இருந்த என் அம்மா மீனாட்சி கவனித்திருக்கிறார். அப்படியென்றால், சித்தப்பா இறந்ததும் வழக்கறிஞரை வைத்து ஜானகி அம்மாளின் ஆலோசகர்களாக இருந்த சிலர் அவசரமாக ஏதோ செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்று தோன்றுகிறதே..! அது என்ன?
சித்தி ஜானகி அம்மாளும் இன்று மறைந்து போய்விட்டார். அவருடைய புகழுக்குக் களங்கம் உண்டாவதுபோல் பேசுவது என் நோக்கமல்ல... அவரை இயக்கியவர்கள் மீதுதான் என் கோபமெல்லாம்!
'சித்தப்பா இறந்துபோவதற்கு முதல்நாள் அவரிடம், ஜானகி அம்மாள் மிகக் கடுமையாக வாக்குவாதம் செய்தார்' என்றும் என்னிடம் தகவல் இருக்கிறது.
சித்தப்பா இறந்தது மாரடைப்பால் என்று சொல்லப்பட்டது. அவருக்கு 69-வது வயது வரையில் இதயநோய் இல்லவே இல்லை. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்வது எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை!'' என்று சொல்லிச் சற்று நிறுத்தியவர், சிறு யோசனைக்குப் பின், ''கடைசிக் காலகட்டங்களில் சித்தப்பா பல நேரங்கள் சிந்தனை தப்பி இருந்ததாகவும், சில ஏற்பாடுகளுக்கு அவர் ஒத்துழைக்க மறுத்த கோபத்தில் அப்போது அவரை எத்தகைய பாராமுகத்தோடு நடத்தினார்கள் என்பதையும் அவருக்குப் பாதுகாப்பாக இருந்த போலீஸார் சொல்லக் கேட்டுக் கண்ணீர் வடித்திருக்கிறேன்!'
தமிழக சட்டமன்ற வரலாறு!
தமிழக சட்டமன்ற வரலாறு!
-எம். பரக்கத் அலி
தமிழக சட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய ஆந்திரப்பிரதேசம் ஆகியவை உள்ளடக்கியதாக இருந்தது 'சென்னை மாகாணம்'.
சென்னையை போலவே பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்களும் அப்போது
நடைமுறையில் இருந்தன. இந்த மாகாணங்களுக்கு பொறுப்பாக தனித்தனி ஆளுநர்கள் செயல்பட்டு வந்தனர். 1773-ம் ஆண்டின் முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் வங்காள ஆளுநர் அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) நியமிக்கப்பட்டார்.
1833 மற்றும் 1853 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்த சட்டங்களின்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கின. 1861 மற்றும் 1892 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 'இந்திய கவுன்சில்கள் சட்டஒத்தின்கீழ் சட்டம் இயற்றும் மன்றங்கள் உருப்பெற்றன.
சென்னை மாகாணத்திற்கான நிர்வாகக் குழுவில் ஆறுக்கு குறைவில்லாத 12-க்கு மேற்படாத எண்ணிக்கையிலான அதிகாரிகள் அல்லாத கூடுதல் உறுப்பினர்களை நியமிக்க 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் வகைசெய்யப்பட்டது. அமைதி மற்றும் நல்லாட்சியை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற இந்த சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1892-ம் ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 20-ஆக அதிகரிக்கப்பட்டது. அதிகாரிகள் அல்லாத இந்த உறுப்பினர்களை மாவட்ட நிர்வாக குழுக்களும் (ஜில்லா போர்டுகள்), பல்கலைக் கழகங்களும், நகராட்சிகளும் பரிந்துரை செய்தன.
மிண்டடோ மார்லி சீர்திருத்தங்கள் என அழைக்கப்படும் 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் முதல் முறையாக சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் நேரடித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இந்த சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50-ஆக உயர்த்தப்பட்டது. 1919-ம் ஆண்டு மாண்டேகு -செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசு சட்டத்தின்கீழ் மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையே சட்டம் இயற்றும் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இச்சட்டத்தின்கீழ் மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாத ஆளுநர் அந்த சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றும் அதிகாரத்தை பெற்றார்.
1919-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் 'சென்னை மாகாண சட்டமன்றம்' 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் மூன்றாண்டுகளாகும். ஆளுநரால் நியமிக்கப்பட்ட 34 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 132 உறுப்பினர்களை கொண்டதாக இது இருந்தது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ம் நாள் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபுவின் வேண்டுகோளின் பேரில் கன்னாட் கோமகன் சென்னை மாகாண சட்டமன்றத்தை ஜனவரி 12-ம் நாள் துவக்கி வைத்தார். இதில் முதல்முறையாக மாகாண ஆளுநர் பிப்ரவரி 14-ம் நாள் உரையாற்றினார்.
1923 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் சென்னை மாகாணத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சட்டமன்றங்கள் அமைந்தன. 1930-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நான்காவது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு, 1935-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் மாகாண தன்னாட்சி 1937-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வரை செயல்பட்டது.
சட்ட மேலவை:
1935-ம் ஆண்டின் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு 'மேல் அவை', 'கீழ் அவை' என இரு அவைகள் உருவாக்கப்பட்டன. இந்த இரு அவைகளும், ஆளுநரும் சேர்ந்து மாகாண சட்டமன்றம் என அழைக்கப்பட்டது. இந்த சட்டமன்றத்தில் கலைக்கப்பட இயலாத நிரந்தர அவையாக 'சட்ட மேலவை' செயல்பட்டது. ஒவ்வொரு மூன்றாண்டின் நிறைவிலும் அதன் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஓய்வுபெற வகை செய்யப்பட்டிருந்தது. இதன் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 54-ஆகவும் அதிகபட்சம் 56-ஆகவும் இருந்தது. சட்ட மேலவையில் 35 பொது உறுப்பினர்களும், ஏழு இஸ்லாமிய உறுப்பினர்களும், ஒரு ஐரோப்பிய உறுப்பினரும், மூன்று இந்திய கிறிஸ்துவ உறுப்பினர்களும் இருந்தனர். எட்டுக்கு குறையாமலும் பத்துக்கு மேற்படாமலும் நியமன உறுப்பினர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
சட்டப்பேரவை:
சென்னை மாகாண சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 215-ஆக இருந்தது. இதில் 146 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றில் கீழ்கண்டவாறு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது:
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 30
பிற்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் பழங்குடியினர் - 1
இஸ்லாமியர்கள்-28
ஆங்கிலோ இந்தியர்கள் - 2
ஐரோப்பியர்கள் - 3
இந்திய கிறிஸ்தவர்கள் -8
தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் - 6
நிலச்சுவான்தார்கள் - 6
பல்கலைக்கழகம் - 1
தொழிலாளர் பிரதிநிதிகள் - 6
பெண்கள் - 8
1935-ம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மாகாணங்களை பொறுத்தவரை 1937-ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாகாணத்தின் முதலாவது சட்டமன்றம் 1937-ம் ஆண்டு ஜுலை மாதம் அமைக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரை ஒட்டி அவசரகால பிரகடனம் அறிவிக்கப்பட்டதால் 1939-ம் ஆண்டு அக்டடோ பர் மாதம் அமைச்சரவை பதவி விலகியது. இதனை தொடர்ந்து இந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
போர் முடிந்ததும் 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மே மாதம் இரண்டாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1952ல் குடியரசு ஆனது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. வயது வந்தோருக்கான வாக்குரிமையின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலை தொடர்ந்து சென்னை மாநிலத்தின் முதலாவது சட்டமன்றம் 1952-ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அமைக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சென்னை மாநில சட்டப்பேரவையில் 375 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். மொத்தம் 309 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இவற்றில் 243 'ஒரு உறுப்பினர் தொகுதி'களும் 66 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களும் இடம் பெற்றிருந்தன. இதில் 62 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களில் தலா ஒரு இடம் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் நான்கு 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களில் தலா ஒரு இடம் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இவை தவிர ஆங்கிலோ இந்திய வகுப்பினரைச் சேர்ந்த ஒரு உறுப்பினரை ஆளுநர் நியமனம் செய்தார்.
ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளை தனி ஆந்திர மாநிலமாக அறிவித்தும், பெல்லாரி மாவட்டத்தின் கன்னடம் பேசப்பட்ட பகுதிகளை அன்றைய மைசூர் மாநிலத்துடன் இணைத்தும் 1953-ம் ஆண்டு அக்டோ பர் 1ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 231-ஆக குறைந்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாளிலிருந்து 'மாநிலங்கள் சீரமைப்புச் சட்டம்' நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து மலபார் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகள் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 190-ஆக குறைந்தது. அன்றைய கேரள மாநிலத்தில் இருந்த தமிழ் பேசும் பகுதிகளான தற்போதைய கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டை வட்டமும் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.
பின்னர் 1956-ஆம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக உயர்ந்தது. மொத்தம் 167 தொகுதிகளில் 38 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் இடம் பெற்றிருந்தன.
1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து இரண்டாவது சட்டப்பேரவை ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 205 உறுப்பினர்களுடன் ஒரு நியமன உறுப்பினரும் இதில் இடம் பெற்றிருந்தார்.
1959ம் ஆண்டு சென்னை மாநிலத்திற்கும் ஆந்திர மாநிலத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை சீர்திருத்தத்தின் விளைவாக ஆந்திர மாநில சட்டப்பேரவையின் ஒரு உறுப்பினர் இடம் சென்னை சட்டப்பேரவைக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 206-ஆக உயர்ந்தது.
1961-ஆம் ஆண்டில் 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் முறை நீக்கப்பட்டன. இதற்கு பதிலாக 38 கூடுதல் 'ஒரு உறுப்பினர்' தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 37 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் ஒரு தொகுதி பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டன. 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை தொடர்ந்து மார்ச் 3-ம் தேதி மூன்றாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1965ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 234-ஆக உயர்த்தப்பட்டன. இவற்றில் 42 இடங்கள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் இரண்டு இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக ஒரு இடத்திற்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டார்.
1967ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களின் விளைவாக மார்ச் முதல் தேதி சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டப்பேரவை அமைந்தது. இந்த சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் 'சென்னை மாநிலம்' 'தமிழ்நாடு' மாநிலமாக பெயர் மாறியது. 1971ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அமைக்கப்பட்ட ஐந்தாவது சட்டப்பேரவை 1976ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
1977-ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி ஆறாவது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1975ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக மாற்றியமைக்கப்பட்ட 234 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த சட்டப்பேரவையும் 1980-ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. இதற்கிடையே 1979-ம் ஆண்டு உப்பிலியாபுரம் பொது தொகுதி பழங்குடியினருக்கான தனித்தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. 1980ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி ஏழாவது சட்டப்பேரவையும் 1985-ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி எட்டாவது சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டன. எட்டாவது சட்டப்பேரவை 1988-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
எட்டாவது சட்டப்பேரவையில் தமிழக 'சட்ட மேலவை'யை நீக்குவதற்கான தீர்மானம் 1986ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அதே ஆண்டின் நவம்பர் 1ம் தேதி தமிழக 'சட்ட மேலவை' கலைக்கப்பட்டது. 1937-ஆம் ஆண்டு இரு அவைகளாக உருவாக்கப்பட்ட தமிழக சட்டமன்றம் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரே அவையைக் கொண்ட சட்டமன்றமாக உருவெடுத்தது.
1989-ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமைந்த 9-வது சட்டப்பேரவை 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே கலைக்கப்பட்ட 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்க இந்த சட்டப்பேரவையில் 1989ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10-வது சட்டப்பேரவை 1991ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்கும் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் 1991ம் ஆண்டு அக்டோ பர் 4-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 1996ம் ஆண்டு மே 13ம் தேதி 11-வது தமிழக சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் ஜுலை 26-ம் தேதி மீண்டும் தமிழக 'சட்ட மேலவை'யை உருவாக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2001ம் ஆண்டு மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து மே 14ம் தேதி 12-வது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 13-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 2006 மே 8ம் தேதி நடைபெற்றது.
தொகுதி மறுசீறுமைப்பு:
இந்தியா குடியரசு ஆனதற்கு பின் தமிழக சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல்
நடவடிக்கைகள் 1951-ம் ஆண்டு இறுதியில் துவங்கி 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 66 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் உட்பட மொத்தம் 309 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1957-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் மாநிலங்கள் சீரமைப்பின் விளைவாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக குறைந்தது. 1965-ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்தது.
1975-ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் 1977-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளில் அப்போது தேர்தல் நடந்தன. 1977-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் 1975-ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடைபெற்று வந்தன. 2007ம் ஆண்டு நடைபெற்ற 'தொகுதி சீரமைப்'பின்படி தொகுதிகள் சில மாற்றி அமைக்கப்பட்ட போதும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
-எம். பரக்கத் அலி
தமிழக சட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய ஆந்திரப்பிரதேசம் ஆகியவை உள்ளடக்கியதாக இருந்தது 'சென்னை மாகாணம்'.
சென்னையை போலவே பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்களும் அப்போது
நடைமுறையில் இருந்தன. இந்த மாகாணங்களுக்கு பொறுப்பாக தனித்தனி ஆளுநர்கள் செயல்பட்டு வந்தனர். 1773-ம் ஆண்டின் முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் வங்காள ஆளுநர் அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) நியமிக்கப்பட்டார்.
1833 மற்றும் 1853 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்த சட்டங்களின்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கின. 1861 மற்றும் 1892 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 'இந்திய கவுன்சில்கள் சட்டஒத்தின்கீழ் சட்டம் இயற்றும் மன்றங்கள் உருப்பெற்றன.
சென்னை மாகாணத்திற்கான நிர்வாகக் குழுவில் ஆறுக்கு குறைவில்லாத 12-க்கு மேற்படாத எண்ணிக்கையிலான அதிகாரிகள் அல்லாத கூடுதல் உறுப்பினர்களை நியமிக்க 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் வகைசெய்யப்பட்டது. அமைதி மற்றும் நல்லாட்சியை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற இந்த சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1892-ம் ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 20-ஆக அதிகரிக்கப்பட்டது. அதிகாரிகள் அல்லாத இந்த உறுப்பினர்களை மாவட்ட நிர்வாக குழுக்களும் (ஜில்லா போர்டுகள்), பல்கலைக் கழகங்களும், நகராட்சிகளும் பரிந்துரை செய்தன.
மிண்டடோ மார்லி சீர்திருத்தங்கள் என அழைக்கப்படும் 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் முதல் முறையாக சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் நேரடித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இந்த சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50-ஆக உயர்த்தப்பட்டது. 1919-ம் ஆண்டு மாண்டேகு -செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசு சட்டத்தின்கீழ் மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையே சட்டம் இயற்றும் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இச்சட்டத்தின்கீழ் மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாத ஆளுநர் அந்த சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றும் அதிகாரத்தை பெற்றார்.
1919-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் 'சென்னை மாகாண சட்டமன்றம்' 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் மூன்றாண்டுகளாகும். ஆளுநரால் நியமிக்கப்பட்ட 34 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 132 உறுப்பினர்களை கொண்டதாக இது இருந்தது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ம் நாள் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபுவின் வேண்டுகோளின் பேரில் கன்னாட் கோமகன் சென்னை மாகாண சட்டமன்றத்தை ஜனவரி 12-ம் நாள் துவக்கி வைத்தார். இதில் முதல்முறையாக மாகாண ஆளுநர் பிப்ரவரி 14-ம் நாள் உரையாற்றினார்.
1923 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் சென்னை மாகாணத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சட்டமன்றங்கள் அமைந்தன. 1930-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நான்காவது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு, 1935-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் மாகாண தன்னாட்சி 1937-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வரை செயல்பட்டது.
சட்ட மேலவை:
1935-ம் ஆண்டின் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு 'மேல் அவை', 'கீழ் அவை' என இரு அவைகள் உருவாக்கப்பட்டன. இந்த இரு அவைகளும், ஆளுநரும் சேர்ந்து மாகாண சட்டமன்றம் என அழைக்கப்பட்டது. இந்த சட்டமன்றத்தில் கலைக்கப்பட இயலாத நிரந்தர அவையாக 'சட்ட மேலவை' செயல்பட்டது. ஒவ்வொரு மூன்றாண்டின் நிறைவிலும் அதன் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஓய்வுபெற வகை செய்யப்பட்டிருந்தது. இதன் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 54-ஆகவும் அதிகபட்சம் 56-ஆகவும் இருந்தது. சட்ட மேலவையில் 35 பொது உறுப்பினர்களும், ஏழு இஸ்லாமிய உறுப்பினர்களும், ஒரு ஐரோப்பிய உறுப்பினரும், மூன்று இந்திய கிறிஸ்துவ உறுப்பினர்களும் இருந்தனர். எட்டுக்கு குறையாமலும் பத்துக்கு மேற்படாமலும் நியமன உறுப்பினர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
சட்டப்பேரவை:
சென்னை மாகாண சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 215-ஆக இருந்தது. இதில் 146 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றில் கீழ்கண்டவாறு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது:
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 30
பிற்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் பழங்குடியினர் - 1
இஸ்லாமியர்கள்-28
ஆங்கிலோ இந்தியர்கள் - 2
ஐரோப்பியர்கள் - 3
இந்திய கிறிஸ்தவர்கள் -8
தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் - 6
நிலச்சுவான்தார்கள் - 6
பல்கலைக்கழகம் - 1
தொழிலாளர் பிரதிநிதிகள் - 6
பெண்கள் - 8
1935-ம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மாகாணங்களை பொறுத்தவரை 1937-ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாகாணத்தின் முதலாவது சட்டமன்றம் 1937-ம் ஆண்டு ஜுலை மாதம் அமைக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரை ஒட்டி அவசரகால பிரகடனம் அறிவிக்கப்பட்டதால் 1939-ம் ஆண்டு அக்டடோ பர் மாதம் அமைச்சரவை பதவி விலகியது. இதனை தொடர்ந்து இந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
போர் முடிந்ததும் 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மே மாதம் இரண்டாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1952ல் குடியரசு ஆனது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. வயது வந்தோருக்கான வாக்குரிமையின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலை தொடர்ந்து சென்னை மாநிலத்தின் முதலாவது சட்டமன்றம் 1952-ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அமைக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சென்னை மாநில சட்டப்பேரவையில் 375 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். மொத்தம் 309 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இவற்றில் 243 'ஒரு உறுப்பினர் தொகுதி'களும் 66 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களும் இடம் பெற்றிருந்தன. இதில் 62 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களில் தலா ஒரு இடம் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் நான்கு 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களில் தலா ஒரு இடம் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இவை தவிர ஆங்கிலோ இந்திய வகுப்பினரைச் சேர்ந்த ஒரு உறுப்பினரை ஆளுநர் நியமனம் செய்தார்.
ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளை தனி ஆந்திர மாநிலமாக அறிவித்தும், பெல்லாரி மாவட்டத்தின் கன்னடம் பேசப்பட்ட பகுதிகளை அன்றைய மைசூர் மாநிலத்துடன் இணைத்தும் 1953-ம் ஆண்டு அக்டோ பர் 1ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 231-ஆக குறைந்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாளிலிருந்து 'மாநிலங்கள் சீரமைப்புச் சட்டம்' நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து மலபார் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகள் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 190-ஆக குறைந்தது. அன்றைய கேரள மாநிலத்தில் இருந்த தமிழ் பேசும் பகுதிகளான தற்போதைய கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டை வட்டமும் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.
பின்னர் 1956-ஆம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக உயர்ந்தது. மொத்தம் 167 தொகுதிகளில் 38 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் இடம் பெற்றிருந்தன.
1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து இரண்டாவது சட்டப்பேரவை ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 205 உறுப்பினர்களுடன் ஒரு நியமன உறுப்பினரும் இதில் இடம் பெற்றிருந்தார்.
1959ம் ஆண்டு சென்னை மாநிலத்திற்கும் ஆந்திர மாநிலத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை சீர்திருத்தத்தின் விளைவாக ஆந்திர மாநில சட்டப்பேரவையின் ஒரு உறுப்பினர் இடம் சென்னை சட்டப்பேரவைக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 206-ஆக உயர்ந்தது.
1961-ஆம் ஆண்டில் 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் முறை நீக்கப்பட்டன. இதற்கு பதிலாக 38 கூடுதல் 'ஒரு உறுப்பினர்' தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 37 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் ஒரு தொகுதி பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டன. 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை தொடர்ந்து மார்ச் 3-ம் தேதி மூன்றாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1965ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 234-ஆக உயர்த்தப்பட்டன. இவற்றில் 42 இடங்கள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் இரண்டு இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக ஒரு இடத்திற்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டார்.
1967ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களின் விளைவாக மார்ச் முதல் தேதி சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டப்பேரவை அமைந்தது. இந்த சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் 'சென்னை மாநிலம்' 'தமிழ்நாடு' மாநிலமாக பெயர் மாறியது. 1971ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அமைக்கப்பட்ட ஐந்தாவது சட்டப்பேரவை 1976ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
1977-ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி ஆறாவது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1975ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக மாற்றியமைக்கப்பட்ட 234 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த சட்டப்பேரவையும் 1980-ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. இதற்கிடையே 1979-ம் ஆண்டு உப்பிலியாபுரம் பொது தொகுதி பழங்குடியினருக்கான தனித்தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. 1980ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி ஏழாவது சட்டப்பேரவையும் 1985-ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி எட்டாவது சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டன. எட்டாவது சட்டப்பேரவை 1988-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
எட்டாவது சட்டப்பேரவையில் தமிழக 'சட்ட மேலவை'யை நீக்குவதற்கான தீர்மானம் 1986ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அதே ஆண்டின் நவம்பர் 1ம் தேதி தமிழக 'சட்ட மேலவை' கலைக்கப்பட்டது. 1937-ஆம் ஆண்டு இரு அவைகளாக உருவாக்கப்பட்ட தமிழக சட்டமன்றம் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரே அவையைக் கொண்ட சட்டமன்றமாக உருவெடுத்தது.
1989-ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமைந்த 9-வது சட்டப்பேரவை 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே கலைக்கப்பட்ட 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்க இந்த சட்டப்பேரவையில் 1989ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10-வது சட்டப்பேரவை 1991ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்கும் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் 1991ம் ஆண்டு அக்டோ பர் 4-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 1996ம் ஆண்டு மே 13ம் தேதி 11-வது தமிழக சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் ஜுலை 26-ம் தேதி மீண்டும் தமிழக 'சட்ட மேலவை'யை உருவாக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2001ம் ஆண்டு மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து மே 14ம் தேதி 12-வது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 13-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 2006 மே 8ம் தேதி நடைபெற்றது.
தொகுதி மறுசீறுமைப்பு:
இந்தியா குடியரசு ஆனதற்கு பின் தமிழக சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல்
நடவடிக்கைகள் 1951-ம் ஆண்டு இறுதியில் துவங்கி 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 66 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் உட்பட மொத்தம் 309 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1957-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் மாநிலங்கள் சீரமைப்பின் விளைவாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக குறைந்தது. 1965-ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்தது.
1975-ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் 1977-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளில் அப்போது தேர்தல் நடந்தன. 1977-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் 1975-ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடைபெற்று வந்தன. 2007ம் ஆண்டு நடைபெற்ற 'தொகுதி சீரமைப்'பின்படி தொகுதிகள் சில மாற்றி அமைக்கப்பட்ட போதும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Thursday, March 10, 2011
அரசியல்
ஒவ்வொரு கூட்டணியாக தாவித் திரியும் ஜாதி வெறியர் ராமதாஸ். அடுத்த கூட்டணிக்கு ஓடிப் போவதையே அன்றாட நடவடிக்கையாக கொண்டுள்ளவர். (11.3.2004 காஞ்சிபுரம் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு)
எட்டு ஆண்டுகளுக்குப் பின் ராமதாஸ் என்னை சந்தித்துள்ளார். நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தோற்கடிக்க முடியாத வெற்றிக் கூட்டணி இது என தெரியவந்துள்ளது. தேர்தல் முடிவு வரும் போது இது உறுதியாகும். (28.3.09 தொகுதிப் பங்கீடு முடிந்தவுடன் ஜெயலலிதா பேட்டி)
தமிழகத்தில் தற்போது உருவாகி உள்ள ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகம் என்ன சொல்கிறது என்று கேட்கவும், அதுபற்றி சிந்திக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க இந்த திருப்பத்தை முதல்வர் கருணாநிதி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (28.10.2008 ராமதாஸ் அறிக்கை)
அன்றைய கேபல்ஸ் நான்கு கோடி ஜெர்மனியர்களைத் தான் ஏமாற்றினான். ஆனால், கருணாநிதியோ, "இலங்கைத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியைப் பலி கொடுத்தவர்கள் நாங்கள்' என தொடர்ந்து சொல்லி, ஏழு கோடி தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். (28.3.2009 ராமதாஸ் அறிக்கை)
எட்டு ஆண்டுகளுக்குப் பின் ராமதாஸ் என்னை சந்தித்துள்ளார். நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தோற்கடிக்க முடியாத வெற்றிக் கூட்டணி இது என தெரியவந்துள்ளது. தேர்தல் முடிவு வரும் போது இது உறுதியாகும். (28.3.09 தொகுதிப் பங்கீடு முடிந்தவுடன் ஜெயலலிதா பேட்டி)
தமிழகத்தில் தற்போது உருவாகி உள்ள ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகம் என்ன சொல்கிறது என்று கேட்கவும், அதுபற்றி சிந்திக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க இந்த திருப்பத்தை முதல்வர் கருணாநிதி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (28.10.2008 ராமதாஸ் அறிக்கை)
அன்றைய கேபல்ஸ் நான்கு கோடி ஜெர்மனியர்களைத் தான் ஏமாற்றினான். ஆனால், கருணாநிதியோ, "இலங்கைத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியைப் பலி கொடுத்தவர்கள் நாங்கள்' என தொடர்ந்து சொல்லி, ஏழு கோடி தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். (28.3.2009 ராமதாஸ் அறிக்கை)
அரசியல்
'பெரிய பணக்காரர் கருணாநிதி; அந்த இடத்தை பிடிக்க ஜெயலலிதா முயற்சி'
ஏப்ரல் 26,2009,00:00 IST
ஊத்தங்கரை : ""எனக்கு வாய்ப்பு கொடுத்தால், வறுமையை ஒழிப்பேன்,'' என விஜயகாந்த் தெரிவித்தார். ஊத்தங்கரை ரவுண் டானாவில் விஜயகாந்த் பேசியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு குழி பறித்து வருகின்றன. வறுமை இது வரையில் ஒழிக்கப்படவில்லை. ஹெலிகாப்டரில் பறந்து பிரசாரம் செய்பவர்களுக்கு மக்கள் பிரச்னை எப்படி தெரியும். நான் உங்களை தேடி வந்துள்ளேன். தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு அவர்கள் மட்டும் உயர்ந்துள்ளனர்; மக்கள் உயர்வடையவில்லை.
தமிழகத்தில் மிகப் பெரிய பணக்காரராக கருணாநிதியுள்ளார். அவரது இடத்தை பிடிக்க வேண்டும் என ஜெயலலிதா முயற்சிக்கிறார். இருவர் ஆட்சியிலும் ஊழல் பெருகி விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் வறுமையை ஒழிக்க முடியாத இவர்கள் எதற்கு? நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன். மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பகுதியில் என் கட்சிக்காரர்களால், போஸ்டர் கூட ஒட்ட முடிய வில்லை. போலீசார் ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளனர். எந்த அரசிலும் இல்லாத அளவுக்கு கரன்ட்டுக்கு லீவு விடப்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சர் சிதம்பரம் வங்கியில் கடன் கிடைக்கும் எனக் கூறினார். ஆனால், ஏழைகளுக்கு இது வரையில் கடன் கிடைக்கவில்லை. கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை அவர்களது கட்சிக்காரர்கள் தான் அனுபவித்து வருகின் றனர்; அதிலும் கொள்ளை. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் எல்லாம் நாடகம் ஆடி வருகின்றனர். இலங்கையில் ஒரு இனமே அழிந்து வருகிறது. நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து, வறுமையை ஒழிக்க முடியும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
ஏப்ரல் 26,2009,00:00 IST
ஊத்தங்கரை : ""எனக்கு வாய்ப்பு கொடுத்தால், வறுமையை ஒழிப்பேன்,'' என விஜயகாந்த் தெரிவித்தார். ஊத்தங்கரை ரவுண் டானாவில் விஜயகாந்த் பேசியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு குழி பறித்து வருகின்றன. வறுமை இது வரையில் ஒழிக்கப்படவில்லை. ஹெலிகாப்டரில் பறந்து பிரசாரம் செய்பவர்களுக்கு மக்கள் பிரச்னை எப்படி தெரியும். நான் உங்களை தேடி வந்துள்ளேன். தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு அவர்கள் மட்டும் உயர்ந்துள்ளனர்; மக்கள் உயர்வடையவில்லை.
தமிழகத்தில் மிகப் பெரிய பணக்காரராக கருணாநிதியுள்ளார். அவரது இடத்தை பிடிக்க வேண்டும் என ஜெயலலிதா முயற்சிக்கிறார். இருவர் ஆட்சியிலும் ஊழல் பெருகி விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் வறுமையை ஒழிக்க முடியாத இவர்கள் எதற்கு? நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன். மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பகுதியில் என் கட்சிக்காரர்களால், போஸ்டர் கூட ஒட்ட முடிய வில்லை. போலீசார் ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளனர். எந்த அரசிலும் இல்லாத அளவுக்கு கரன்ட்டுக்கு லீவு விடப்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சர் சிதம்பரம் வங்கியில் கடன் கிடைக்கும் எனக் கூறினார். ஆனால், ஏழைகளுக்கு இது வரையில் கடன் கிடைக்கவில்லை. கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை அவர்களது கட்சிக்காரர்கள் தான் அனுபவித்து வருகின் றனர்; அதிலும் கொள்ளை. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் எல்லாம் நாடகம் ஆடி வருகின்றனர். இலங்கையில் ஒரு இனமே அழிந்து வருகிறது. நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து, வறுமையை ஒழிக்க முடியும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
அரசியல்
மைசூரில் இருந்து வறுமை காரணமாக சென்னைக்கு வந்தவர் தான் ஜெயலலிதா. நடிப்பையே தொழிலாக கொண்ட ஜெயலலிதா எப்படியோ முதல்வராகி விட்டார்.
(16.4.2004 மேச்சேரி கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
தமிழகத்தில் மக்கள் சக்தி முழுவதும் ஜெயலலிதாவின் பக்கம் தான் உள்ளது. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
(16.4.2009 சென்னை பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
(16.4.2004 மேச்சேரி கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
தமிழகத்தில் மக்கள் சக்தி முழுவதும் ஜெயலலிதாவின் பக்கம் தான் உள்ளது. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
(16.4.2009 சென்னை பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
அரசியல்
இலங்கைத் தமிழர் பிரச்னையில் நாம் சேர்ந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம். அடுத்த கட்ட போராட்டத்திற்காக ஒரு முடிவெடுப்போம். தமிழக முதல்வர் முன்னிலையில் போராடுவோம். (18.1.2009 செங்கல்பட்டு உண்ணாவிரத மேடையில் ராமதாஸ் பேச்சு)
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதியும், மத்திய அமைச்சர் சிதம்பரமும் இணைந்து நடத்தியது தான் உண்ணாவிரத நாடகம். கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் மிகப்பெரியது இது தான். நாடகத்துக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டர். (27.4.2009 திருச்சியில் ராமதாஸ் பேட்டி)
ஜம்மு - காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து, அதாவது தனி நாடு கோரிக்கை குறித்து, கருணாநிதியின் நிலை என்ன? தமிழ் ஈழம் குறித்து கருணாநிதி என்ன நிலை கொண்டுள்ளாரோ அதே நிலையை இந்தியாவின் பிரச்னைக்குரிய மாநிலங்களுக்கும் அறிவுறுத்த விரும்புகிறாரா? (29.1.2009 ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை)
இலங்கையில் தனி ஈழம் உருவாக வேண்டும் என்று தான் பேசினேன். இது எப்படி இந்தியாவுக்குள் தேச விரோத கருத்தாக இருக்க முடியும்? (27.4.2009 ஜெயலலிதா அறிக்கை)
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதியும், மத்திய அமைச்சர் சிதம்பரமும் இணைந்து நடத்தியது தான் உண்ணாவிரத நாடகம். கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் மிகப்பெரியது இது தான். நாடகத்துக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டர். (27.4.2009 திருச்சியில் ராமதாஸ் பேட்டி)
ஜம்மு - காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து, அதாவது தனி நாடு கோரிக்கை குறித்து, கருணாநிதியின் நிலை என்ன? தமிழ் ஈழம் குறித்து கருணாநிதி என்ன நிலை கொண்டுள்ளாரோ அதே நிலையை இந்தியாவின் பிரச்னைக்குரிய மாநிலங்களுக்கும் அறிவுறுத்த விரும்புகிறாரா? (29.1.2009 ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை)
இலங்கையில் தனி ஈழம் உருவாக வேண்டும் என்று தான் பேசினேன். இது எப்படி இந்தியாவுக்குள் தேச விரோத கருத்தாக இருக்க முடியும்? (27.4.2009 ஜெயலலிதா அறிக்கை)
அரசியல்
கூட்டணி அமைத்து கொள்ளை: விஜயகாந்த்
ஏப்ரல் 29,2009,00:00 IST
Latest indian and world political news information
திருத்தணி : "கூட்டணி அமைத்துக்கொள்ளை அடிப்பது அதை பங்கு போட்டு பிரிப்பது என்பதற்காக தான் கூட்டணி. அதுபோன்ற கூட்டணியில் சேர நான் விரும்பாமல் தனித்து நிற்கிறேன்' என, விஜயகாந்த் ஆவேசமாகப் பேசினார்.
அரக்கோணம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து திருத்தணி நகராட்சி அலுவலகம் மற்றும் அரக்கோணம் பஸ் நிலையத்தில் கொளுத்தும் வெயிலில் நேற்று விஜயகாந்த் பேசியதாவது:விலைவாசி உயர்வுக்கு பொதுமக்கள் தான் காரணம். தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டு போட்டதால் அவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், விலைவாசி உயர்வு, மின்தட்டுப் பாடு, வறுமை போன்றவையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார்.அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள்.
எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களாகிய நீங்கள் சிந்தித்து ஓட்டு போட் டால், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.லோக்சபா தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலில் கூட்டணி அமைப்பது கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து, பின் பங்கு போட்டுக்கொள்வதற்காக தான். நான் மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்க விரும்பாததால் தான் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களோடு கூட் டணி வைத்து தேர்தலை சந்திக்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
அவரது பேச்சைக் கேட்க கொளுத்தும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
"கருணாநிதிக்கு நடிக்கவும் தெரியும்' :வறுமையும், ஊழலும் இரண்டற கலந்தது தான் தி.மு.க., ஆட்சி. இலங்கைப் போர் நிறுத்தம் குறித்து கருணாநிதி ஒரு நாடகத்தை காலை 6 மணிக்குத் துவங்கி 12.30 மணிக்கு முடித்துள் ளார். போர் நிறுத்திவிட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.அதாவது, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது கருணாநிதியின் உண்ணாவிரத நாடக அரங்கேற்றம். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக இருந்தால் ரத்தக் கொதிப்பு இருப்பதைப் பார்க்க எதற்கு அங்கு டாக்டர்கள்?கருணாநிதிக்கு கதை வசனம் மட்டுமே தெரியும் என்று பார்த்தேன். ஆனால், நன்றாக நடிக்கவும் செய்கிறார். போர்வை போர்த்தி எட்டு ஏர் கூலர்கள் வைத்துக் கொண்டு வாடினேன், வதங்கினேன் என்றால் நியாயமா? தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் இலங்கைத் தமிழர்களை வைத்து ஏமாற்றுவேலை நடத்தி வருகின்றனர்.பா.ம.க., செயற்குழு கூட்டம் போட்டு அ.தி.மு.க., - தி.மு.க., என பெட்டி வைத்து ஓட்டு போட்டனர். ஆனால், அதில் பா.ம.க.,வின் நிலைப்பாடு குறித்து அறிவதற்கு பா.ம.க., என்ற பெட்டி வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் நெம்பர் 1 பணக்காரர் பட்டியலில் கருணாநிதி உள்ளார்.ஜெயலலிதாவுக்குக் குடும்பம் இல்லை என்றால் பையனூர், சிறுதாவூர், ஐதராபாத் திராட்சைத் தோட்டம் எல்லாம் எதற்கு?இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
ஏப்ரல் 29,2009,00:00 IST
Latest indian and world political news information
திருத்தணி : "கூட்டணி அமைத்துக்கொள்ளை அடிப்பது அதை பங்கு போட்டு பிரிப்பது என்பதற்காக தான் கூட்டணி. அதுபோன்ற கூட்டணியில் சேர நான் விரும்பாமல் தனித்து நிற்கிறேன்' என, விஜயகாந்த் ஆவேசமாகப் பேசினார்.
அரக்கோணம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து திருத்தணி நகராட்சி அலுவலகம் மற்றும் அரக்கோணம் பஸ் நிலையத்தில் கொளுத்தும் வெயிலில் நேற்று விஜயகாந்த் பேசியதாவது:விலைவாசி உயர்வுக்கு பொதுமக்கள் தான் காரணம். தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டு போட்டதால் அவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், விலைவாசி உயர்வு, மின்தட்டுப் பாடு, வறுமை போன்றவையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார்.அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள்.
எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களாகிய நீங்கள் சிந்தித்து ஓட்டு போட் டால், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.லோக்சபா தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலில் கூட்டணி அமைப்பது கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து, பின் பங்கு போட்டுக்கொள்வதற்காக தான். நான் மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்க விரும்பாததால் தான் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களோடு கூட் டணி வைத்து தேர்தலை சந்திக்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
அவரது பேச்சைக் கேட்க கொளுத்தும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
"கருணாநிதிக்கு நடிக்கவும் தெரியும்' :வறுமையும், ஊழலும் இரண்டற கலந்தது தான் தி.மு.க., ஆட்சி. இலங்கைப் போர் நிறுத்தம் குறித்து கருணாநிதி ஒரு நாடகத்தை காலை 6 மணிக்குத் துவங்கி 12.30 மணிக்கு முடித்துள் ளார். போர் நிறுத்திவிட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.அதாவது, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது கருணாநிதியின் உண்ணாவிரத நாடக அரங்கேற்றம். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக இருந்தால் ரத்தக் கொதிப்பு இருப்பதைப் பார்க்க எதற்கு அங்கு டாக்டர்கள்?கருணாநிதிக்கு கதை வசனம் மட்டுமே தெரியும் என்று பார்த்தேன். ஆனால், நன்றாக நடிக்கவும் செய்கிறார். போர்வை போர்த்தி எட்டு ஏர் கூலர்கள் வைத்துக் கொண்டு வாடினேன், வதங்கினேன் என்றால் நியாயமா? தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் இலங்கைத் தமிழர்களை வைத்து ஏமாற்றுவேலை நடத்தி வருகின்றனர்.பா.ம.க., செயற்குழு கூட்டம் போட்டு அ.தி.மு.க., - தி.மு.க., என பெட்டி வைத்து ஓட்டு போட்டனர். ஆனால், அதில் பா.ம.க.,வின் நிலைப்பாடு குறித்து அறிவதற்கு பா.ம.க., என்ற பெட்டி வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் நெம்பர் 1 பணக்காரர் பட்டியலில் கருணாநிதி உள்ளார்.ஜெயலலிதாவுக்குக் குடும்பம் இல்லை என்றால் பையனூர், சிறுதாவூர், ஐதராபாத் திராட்சைத் தோட்டம் எல்லாம் எதற்கு?இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
அரசியல்
காங்.,க்கு டிபாசிட் கிடைக்க கூடாது: ராமதாஸ்
ஏப்ரல் 30,2009,00:00 IST
Latest indian and world political news information
திருப்புத்தூர்:தமிழகத்தில் 17 இடங்களிலும் காங்.,க்கு டிபாசிட் கிடைக்கக் கூடாது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.திருப்புத்தூரில் அ.தி.மு.க.,வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்துப் பிரசாரக் கூட்டம் நடந்தது. ராமதாஸ் பேசியதாவது:
நாட்டின் இரு பெரும் துறைகளில் இருந்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கும், தொகுதிக்கும் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளத்தின் போது முதல்வர் கருணாநிதி 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கக் கோரினார். ஆனால், 200 கோடி தான் ஒதுக்கப்பட்டது. சிதம்பரம் அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை.ஜெ., முதல்வராக இருந்த போது வெள்ளத்தின் போது 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தர்மபுரியைப் போல மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி சிவகங்கை. வேலு ரயில்வே அமைச்சராக இருந்து நடவடிக்கை எடுத்து சிவகங்கையில் அகலப்பாதையாக்கினார். உலகமயமாக்கலைப் பின்பற்றியதால் பொருளாதாரம் சீரழிந்தது. 17 இடங்களிலும் காங்., டிபாசிட் வாங்கக் கூடாது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
ஏப்ரல் 30,2009,00:00 IST
Latest indian and world political news information
திருப்புத்தூர்:தமிழகத்தில் 17 இடங்களிலும் காங்.,க்கு டிபாசிட் கிடைக்கக் கூடாது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.திருப்புத்தூரில் அ.தி.மு.க.,வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்துப் பிரசாரக் கூட்டம் நடந்தது. ராமதாஸ் பேசியதாவது:
நாட்டின் இரு பெரும் துறைகளில் இருந்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கும், தொகுதிக்கும் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளத்தின் போது முதல்வர் கருணாநிதி 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கக் கோரினார். ஆனால், 200 கோடி தான் ஒதுக்கப்பட்டது. சிதம்பரம் அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை.ஜெ., முதல்வராக இருந்த போது வெள்ளத்தின் போது 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தர்மபுரியைப் போல மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி சிவகங்கை. வேலு ரயில்வே அமைச்சராக இருந்து நடவடிக்கை எடுத்து சிவகங்கையில் அகலப்பாதையாக்கினார். உலகமயமாக்கலைப் பின்பற்றியதால் பொருளாதாரம் சீரழிந்தது. 17 இடங்களிலும் காங்., டிபாசிட் வாங்கக் கூடாது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
அரசியல்
தமிழகம், புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உறுதி
மே 01,2009,00:00 IST
Latest indian and world political news information
புதுச்சேரி:"தமிழகம், புதுச்சேரியில் இரண்டு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்,' என்று பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.புதுச்சேரியில் பா.ம.க., வேட்பாளர் ராமதாசை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்திலிருந்து காங்., கட்சியை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் 35 தொகுதிகளில் சுற்றி வந்து விட்டேன். மக்கள் சக்தி அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து வருகிறது.புதுச்சேரி மாநிலம் எல்லா நிலையிலும் முதன்மை மாநிலமாக வர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன், காங்., இல்லாத ஆட்சி அமையப் போகிறது என்ற நல்ல செய்தியை உங்களுக்கு சொல்கிறேன். எங்கள் வேட்பாளர் ராமதாஸ் தனது சாதனைகளை அறிக்கையாக அளித்துள்ளார். அனைத்து தரப்பினரும் படித்து பார்க்க வேண்டும். பணமா.. சேவையா.. என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
சேவையைத்தான் மக்கள் தேர்வு செய்வார்கள். நாராயணசாமி எப்படிப்பட்டவர் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரியும். அவரது கட்சியினரே அவரைப் பற்றி கூறுவார்கள். அவருக்கு ஓட்டு போடுவது கொல்லிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமம். மத்தியிலும், மாநிலத்திலும் புரட்சிகரமான, முற்போக்கு சிந்தனை கொண்ட முதன்மையான அரசு அமைய உள்ளது.
2 மாதத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் நடக்கும்."தனக்கு மக்கள்தான் குடும்பம்; கருணாநிதிக்கு குடும்பம்தான் மக்கள்' என ஜெயலலிதா கூறுவார். அதைப்போல் ரங்கசாமி, மக்கள் தான் குடும்பம் என பணியாற்றியுள்ளார். நல்லாட்சியை தந்த முதல்வரை பதவியில் இருந்து தூக்கினர். காமராஜர் ஆட்சியை அளித்த முதல்வரை பதவியில் இருந்து தூக்கியதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர். எனக்கு தெரியாது என நாராயணசாமி சத்தியம் செய்கிறார்.
நாராயணசாமி சொன்னால் சோனியா கேட்பார். இந்திய அளவில் காங்., அழியப் போகிறது. இரண்டு மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது. என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ரங்கசாமி முதல்வராகும் காலம் நிச்சயமாக உள்ளது. மக்கள் கூறுவதை நான் சொல்கிறேன். புதிய மாற்றங்கள் வர மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்
மே 01,2009,00:00 IST
Latest indian and world political news information
புதுச்சேரி:"தமிழகம், புதுச்சேரியில் இரண்டு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்,' என்று பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.புதுச்சேரியில் பா.ம.க., வேட்பாளர் ராமதாசை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்திலிருந்து காங்., கட்சியை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் 35 தொகுதிகளில் சுற்றி வந்து விட்டேன். மக்கள் சக்தி அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து வருகிறது.புதுச்சேரி மாநிலம் எல்லா நிலையிலும் முதன்மை மாநிலமாக வர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன், காங்., இல்லாத ஆட்சி அமையப் போகிறது என்ற நல்ல செய்தியை உங்களுக்கு சொல்கிறேன். எங்கள் வேட்பாளர் ராமதாஸ் தனது சாதனைகளை அறிக்கையாக அளித்துள்ளார். அனைத்து தரப்பினரும் படித்து பார்க்க வேண்டும். பணமா.. சேவையா.. என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
சேவையைத்தான் மக்கள் தேர்வு செய்வார்கள். நாராயணசாமி எப்படிப்பட்டவர் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரியும். அவரது கட்சியினரே அவரைப் பற்றி கூறுவார்கள். அவருக்கு ஓட்டு போடுவது கொல்லிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமம். மத்தியிலும், மாநிலத்திலும் புரட்சிகரமான, முற்போக்கு சிந்தனை கொண்ட முதன்மையான அரசு அமைய உள்ளது.
2 மாதத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் நடக்கும்."தனக்கு மக்கள்தான் குடும்பம்; கருணாநிதிக்கு குடும்பம்தான் மக்கள்' என ஜெயலலிதா கூறுவார். அதைப்போல் ரங்கசாமி, மக்கள் தான் குடும்பம் என பணியாற்றியுள்ளார். நல்லாட்சியை தந்த முதல்வரை பதவியில் இருந்து தூக்கினர். காமராஜர் ஆட்சியை அளித்த முதல்வரை பதவியில் இருந்து தூக்கியதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர். எனக்கு தெரியாது என நாராயணசாமி சத்தியம் செய்கிறார்.
நாராயணசாமி சொன்னால் சோனியா கேட்பார். இந்திய அளவில் காங்., அழியப் போகிறது. இரண்டு மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது. என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ரங்கசாமி முதல்வராகும் காலம் நிச்சயமாக உள்ளது. மக்கள் கூறுவதை நான் சொல்கிறேன். புதிய மாற்றங்கள் வர மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்
அரசியல்
ரூர் லோக்சபா தொகுதியில் 10 ஆண்டுக்கு ஒரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளவர் மு.தம்பிதுரை. 1989, 1998 தேர்தல்களில் இத் தொகுதியில் வெற்றி பெற் றார். '98ல் மத்திய அமைச்சரானார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதே தொகுதியில் இவர் போட்டியிடுவதால், "சென்டிமென்ட்' சாதகமாக இருக்கும் என நம்புகிறார். தமிழகத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக இருந்துகொண்டே எம்.பி., தேர்தலில் போட்டியிடுபவர், இவர் ஒருவர் தான். ஏராளமான கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
உண்மையின் நிறம்:இவர், மத்திய அமைச்சராக இருந்தபோது, கரூர் லாலாபேட் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அமைச்சர் பதவி முடிந்ததும், அது பற்றிய கோப்புகளை தேடியதில், அப்படி ஒரு கோப்பே இல்லை என்பது தெரியவந்தது. டெண்டர் விடாமல், நிதி ஒதுக்காமலேயே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி சாதனை படைத்தவர்
உண்மையின் நிறம்:இவர், மத்திய அமைச்சராக இருந்தபோது, கரூர் லாலாபேட் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அமைச்சர் பதவி முடிந்ததும், அது பற்றிய கோப்புகளை தேடியதில், அப்படி ஒரு கோப்பே இல்லை என்பது தெரியவந்தது. டெண்டர் விடாமல், நிதி ஒதுக்காமலேயே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி சாதனை படைத்தவர்
அரசியல்
ஈழத் தமிழர் பிரச்னைக்காக தி.மு.க., அரசு கலைக்கப்படாது. அதற்கான வாய்ப்பு இல்லை. ஆட்சியைக் கலைக்க விடமாட்டோம்.
(23.1.2009 காஞ்சிபுரம் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
லோக்சபா தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் தேர்தல் மூலமோ, இல்லாமலோ ஆட்சி மாற்றம் வரலாம்.
(27.4.2009 திருச்சியில் ராமதாஸ் பேட்டி)
ஜெயலலிதாவின் கீழ்த்தரமான பேச்சு, ஈட்டி போல் எங்கள் நெஞ்சில் குத்துகிறது. எம்.ஜி.ஆர்., நடத்திய கட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா தற்போது ஆட்சி நடத்தி வருகிறார். இது நீண்ட நாள் நீடிக்காது.
(2.4.04 வைகோ பேச்சு)
பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா மிகத் திறமையான சரியான நபர். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்கு முன்மொழியும் முதல் ஆள் நான் தான்.
(27.4.2009 ஊட்டியில் வைகோ அளித்த பேட்டி)
(23.1.2009 காஞ்சிபுரம் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
லோக்சபா தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் தேர்தல் மூலமோ, இல்லாமலோ ஆட்சி மாற்றம் வரலாம்.
(27.4.2009 திருச்சியில் ராமதாஸ் பேட்டி)
ஜெயலலிதாவின் கீழ்த்தரமான பேச்சு, ஈட்டி போல் எங்கள் நெஞ்சில் குத்துகிறது. எம்.ஜி.ஆர்., நடத்திய கட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா தற்போது ஆட்சி நடத்தி வருகிறார். இது நீண்ட நாள் நீடிக்காது.
(2.4.04 வைகோ பேச்சு)
பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா மிகத் திறமையான சரியான நபர். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்கு முன்மொழியும் முதல் ஆள் நான் தான்.
(27.4.2009 ஊட்டியில் வைகோ அளித்த பேட்டி)
அரசியல்
எல்லா அக்கிரமத்திற்கும் ஒரு முடிவு மொத்தமாக வரும். ஜெயலலிதாவின் நாசகார ஆட்சிக்கு இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி விழுந்து விடும். நான் ஆட்சிக்கு மட்டும் சொல்லவில்லை. ஜெயலலிதாவுக்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி விழப் போகிறது.
(19.4.2004 திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு)
வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுகிறோம். இந்த தேர்தலில் நம் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். இதற்காக நீங்கள் பாடுபடுங்கள்.
(9.4.2009 சென்னை பொதுக்குழுவில் வைகோ பேச்சு)
தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணி தேர்தலுக்காக மட்டுமல்ல; பெரியார் விட்டுச் சென்ற கொள்கைகளை மீட்க தொடர்ந்து நிலைக்கும். இந்த தேர்தலுக்குப் பின் பல தேர்தல்கள் வரலாம். சட்டசபை தேர்தலிலும் கூட்டணி இருக்கும். பா.ம.க., இல்லை என்றாலும் பரவாயில்லை. கட்சியில் ஒருவன் கூட இல்லை என்றாலும் பரவாயில்லை. இனி அ.தி.மு.க.,வுடன் சாகும் வரை கூட்டணி இருக்காது.
(1.5.2004 விழுப்புரம் செயல் வீரர்கள் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்துள்ள நாங்கள் நாகரிகமாக தேர்தலை சந்திப்போம். கூட்டணி தர்மத்தை பா.ம.க., முழுமையாக கடைபிடிக்கும். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் பா.ம.க.,வினர் மூன்று மடங்கு கடுமையாக பணியாற்றுவர்.
(27.3.09 பா.ம.க., தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் ராமதாஸ் பேட்டி)
(19.4.2004 திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு)
வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுகிறோம். இந்த தேர்தலில் நம் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். இதற்காக நீங்கள் பாடுபடுங்கள்.
(9.4.2009 சென்னை பொதுக்குழுவில் வைகோ பேச்சு)
தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணி தேர்தலுக்காக மட்டுமல்ல; பெரியார் விட்டுச் சென்ற கொள்கைகளை மீட்க தொடர்ந்து நிலைக்கும். இந்த தேர்தலுக்குப் பின் பல தேர்தல்கள் வரலாம். சட்டசபை தேர்தலிலும் கூட்டணி இருக்கும். பா.ம.க., இல்லை என்றாலும் பரவாயில்லை. கட்சியில் ஒருவன் கூட இல்லை என்றாலும் பரவாயில்லை. இனி அ.தி.மு.க.,வுடன் சாகும் வரை கூட்டணி இருக்காது.
(1.5.2004 விழுப்புரம் செயல் வீரர்கள் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்துள்ள நாங்கள் நாகரிகமாக தேர்தலை சந்திப்போம். கூட்டணி தர்மத்தை பா.ம.க., முழுமையாக கடைபிடிக்கும். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் பா.ம.க.,வினர் மூன்று மடங்கு கடுமையாக பணியாற்றுவர்.
(27.3.09 பா.ம.க., தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் ராமதாஸ் பேட்டி)
அரசியல்
பிரதமர் வேட்பாளர் ஜெ.,! கூறுகிறார் வைகோ
மே 02,2009,00:00 IST
Latest indian and world political news information
காரைக்குடி:பிரதமர் வேட்பாளராக ஜெ.,க்கு தகுதி உள்ளதாக ம.தி.மு.க.,பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.சிவகங்கை தொகுதிஅ.தி.மு.க., வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்து காரைக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ பேசியதாவது: இத்தேர்தலில் மாநில கட்சிகள் தான் பிரதமரை தீர்மானிக்கும். பிரதமர் வேட்பாளராக ஜெ.,விற்கு தகுதி உண்டு. ப.சிதம்பரத்தின் கொள்கையால் இந்திய பொருளாதாரம் பாதித்தது.
நிர்வாக சீர்கேடு: கர்நாடகா தேர்தலுக்காக ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கைவிட சொன்ன சோனியாவிடம் தமிழர்களின் நலனுக்காக ப.சிதம்பரம் தட்டிக்கேட்டதுண்டா. கேரளாவிலிருந்து 2,000 டி.எம்.சி.,தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் காங்., நடுநிலையுடன் இருக்க அவர் வலியுறுத்தினாரா. கேரளாவில் மணல் எடுக்க அனுமதி யில்லை. தமிழக ஆறுகளில் மணல் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது.
ஜெ.,ஆட்சியில் 10,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. தி.மு.க.,அரசின் நிர்வாக சீர்கேட்டால் 7,500 மெகாவாட் ஆக குறைந்துவிட்டது.ப.சிதம்பரம் நிதி: இலங்கையில் ஐந்து ஆண்டுகளாக தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதம் வழங்கியதே ஐ.மு.,கூட்டணி அரசு தான். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது தான் இலங்கைக்கு மத்திய அரசு வட்டியில்லா கடன் தந்தது. அப்பணத்தில் பாகிஸ்தான், சீனா, இஸ்ரேலில் இருந்து ஆயுதம் வாங்கி தமிழர்களை கொன்று குவிக்கின்றனர்.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் 48 மணிநேரம் போர் நிறுத்தம் என அறிவித்தார். அறிவிப்புக்கு பின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த 7,000 பேரில் 2,800 பேரை கொன்றனர். இலங்கை அரசிடம் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தியது உண்டா. அதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் . இவ்வாறு அவர் பேசினார்.
மே 02,2009,00:00 IST
Latest indian and world political news information
காரைக்குடி:பிரதமர் வேட்பாளராக ஜெ.,க்கு தகுதி உள்ளதாக ம.தி.மு.க.,பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.சிவகங்கை தொகுதிஅ.தி.மு.க., வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்து காரைக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ பேசியதாவது: இத்தேர்தலில் மாநில கட்சிகள் தான் பிரதமரை தீர்மானிக்கும். பிரதமர் வேட்பாளராக ஜெ.,விற்கு தகுதி உண்டு. ப.சிதம்பரத்தின் கொள்கையால் இந்திய பொருளாதாரம் பாதித்தது.
நிர்வாக சீர்கேடு: கர்நாடகா தேர்தலுக்காக ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கைவிட சொன்ன சோனியாவிடம் தமிழர்களின் நலனுக்காக ப.சிதம்பரம் தட்டிக்கேட்டதுண்டா. கேரளாவிலிருந்து 2,000 டி.எம்.சி.,தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் காங்., நடுநிலையுடன் இருக்க அவர் வலியுறுத்தினாரா. கேரளாவில் மணல் எடுக்க அனுமதி யில்லை. தமிழக ஆறுகளில் மணல் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது.
ஜெ.,ஆட்சியில் 10,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. தி.மு.க.,அரசின் நிர்வாக சீர்கேட்டால் 7,500 மெகாவாட் ஆக குறைந்துவிட்டது.ப.சிதம்பரம் நிதி: இலங்கையில் ஐந்து ஆண்டுகளாக தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதம் வழங்கியதே ஐ.மு.,கூட்டணி அரசு தான். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது தான் இலங்கைக்கு மத்திய அரசு வட்டியில்லா கடன் தந்தது. அப்பணத்தில் பாகிஸ்தான், சீனா, இஸ்ரேலில் இருந்து ஆயுதம் வாங்கி தமிழர்களை கொன்று குவிக்கின்றனர்.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் 48 மணிநேரம் போர் நிறுத்தம் என அறிவித்தார். அறிவிப்புக்கு பின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த 7,000 பேரில் 2,800 பேரை கொன்றனர். இலங்கை அரசிடம் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தியது உண்டா. அதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் . இவ்வாறு அவர் பேசினார்.
அரசியல்
ஜெயலலிதாவால் தான் இலங்கை பிரச்னையை தீர்க்க முடியும்*ராமதாஸ் சர்டிபிகேட்
மே 07,2009,00:00 IST
Latest indian and world political news information
திருத்தணி:""இலங்கை பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க இந்தியாவில் ஜெயலலிதா ஒருவரால் தான் முடியும் என உலகத் தமிழர்கள் கடிதம் எழுதியுள்ளனர்'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.திருத்தணியில் பா.ம.க., வேட் பாளர் வேலுவை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அரி தலைமை வகித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
டந்த 40 வருடங்களாக முதல்வர் கருணாநிதி, இலங்கை தமிழர்கள் பிரச்னையில் நாடகம் போட்ட வேஷங்கள் ஏராளம். உலக தமிழர்களுக்கு தான் தலைவர் என அவர் மார்தட்டிக் கொள்கிறார். ஆனால், இவர் தனது குடும்ப தொலைக் காட்சியில் தமிழை குத்தகைக்கு விட்டு சீரழித்து வருகிறார்.தமிழர்களுக்கு தனி ஈழம் பெற்றுத் தருவேன் என ஜெயலலிதா கூறுகிறார். தமிழ் ஈழம் தனியாக பெற்றுக் கொடுத்தால் சீன மக்கள் சும்மா இருப்பார்களா? என கருணாநிதி அவர்களை உசுப்பு ஏற்றுகிறார்.
இலங் கை தமிழர்கள் பிரச்னைக்காக கருணாநிதி உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு காலையில் 6 மணிக்கு டிபன் சாப்பிட் டார்.மதிய உணவுக்கு முன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போர் நிறுத்தம் முடிந்த பிறகு 272 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறித்து கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கருணாநிதி "மழை விட்டது; தூவானம் விடவில்லை' என கவிதை பாடியுள்ளார்.
தி.மு.க., என்பது ஒரு கட்சியே கிடையாது. நாங்கள் மூன்று ஆண்டுகள் தி.மு.க., கூட்டணியில் இருந்த போது கூட மக்கள் நலனுக்காக அரசு எதிர்த்து பல் வேறு போராட்டங்கள் நடத்தினோம். இதனால் என்னை கூட்டணிக்கு துரோகம் செய்பவர் என்றும் ராமதாஸ் ஒரு கொடுமைக்காரர் என கருணாநிதி வசை பாடினார். இலங்கை பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க இந்தியாவில் ஜெயலலிதா ஒருவரால் தான் முடியும் என தென் ஆப்ரிக்க தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர், சுவிட்சர்லாந்து தமிழர்கள் அனைவரும் கடிதம் எழுதியுள்ளனர். கருணாநிதிக்கு முத்தமிழ் வித்தகர் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர். அவர் முத்தமிழையும் விற்றவர் என ஜெயலலிதா கூறியது சரி தான்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
மே 07,2009,00:00 IST
Latest indian and world political news information
திருத்தணி:""இலங்கை பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க இந்தியாவில் ஜெயலலிதா ஒருவரால் தான் முடியும் என உலகத் தமிழர்கள் கடிதம் எழுதியுள்ளனர்'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.திருத்தணியில் பா.ம.க., வேட் பாளர் வேலுவை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அரி தலைமை வகித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
டந்த 40 வருடங்களாக முதல்வர் கருணாநிதி, இலங்கை தமிழர்கள் பிரச்னையில் நாடகம் போட்ட வேஷங்கள் ஏராளம். உலக தமிழர்களுக்கு தான் தலைவர் என அவர் மார்தட்டிக் கொள்கிறார். ஆனால், இவர் தனது குடும்ப தொலைக் காட்சியில் தமிழை குத்தகைக்கு விட்டு சீரழித்து வருகிறார்.தமிழர்களுக்கு தனி ஈழம் பெற்றுத் தருவேன் என ஜெயலலிதா கூறுகிறார். தமிழ் ஈழம் தனியாக பெற்றுக் கொடுத்தால் சீன மக்கள் சும்மா இருப்பார்களா? என கருணாநிதி அவர்களை உசுப்பு ஏற்றுகிறார்.
இலங் கை தமிழர்கள் பிரச்னைக்காக கருணாநிதி உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு காலையில் 6 மணிக்கு டிபன் சாப்பிட் டார்.மதிய உணவுக்கு முன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போர் நிறுத்தம் முடிந்த பிறகு 272 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறித்து கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கருணாநிதி "மழை விட்டது; தூவானம் விடவில்லை' என கவிதை பாடியுள்ளார்.
தி.மு.க., என்பது ஒரு கட்சியே கிடையாது. நாங்கள் மூன்று ஆண்டுகள் தி.மு.க., கூட்டணியில் இருந்த போது கூட மக்கள் நலனுக்காக அரசு எதிர்த்து பல் வேறு போராட்டங்கள் நடத்தினோம். இதனால் என்னை கூட்டணிக்கு துரோகம் செய்பவர் என்றும் ராமதாஸ் ஒரு கொடுமைக்காரர் என கருணாநிதி வசை பாடினார். இலங்கை பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க இந்தியாவில் ஜெயலலிதா ஒருவரால் தான் முடியும் என தென் ஆப்ரிக்க தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர், சுவிட்சர்லாந்து தமிழர்கள் அனைவரும் கடிதம் எழுதியுள்ளனர். கருணாநிதிக்கு முத்தமிழ் வித்தகர் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர். அவர் முத்தமிழையும் விற்றவர் என ஜெயலலிதா கூறியது சரி தான்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
அரசியல்
பிரதமராக இருந்த சந்திரசேகர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, 1991 ஜூன் மாதம் லோக்சபா தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., வுடன் இ. காங்கிரஸ் கூட்டணி கொண்டிருந்தது. இரண்டு கட்டங்களாக இந்த தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜிவ் காந்தி, மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் லோக்சபா தேர்தல் முடிவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ராஜிவ் கொலை செய்யப்பட்டதால், இந்தியா முழுவதும் அனுதாப அலை வீசியது.
இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில் இந்திரா காங்கிரஸ் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது. என்றாலும், 543 இடங்களை கொண்ட லோக்சபாவில், காங்கிரசுக்கு 232 இடங்களே கிடைத்தன. ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், தனிபெருங்கட்சி என்ற முறையில், இந்திரா காங்கிரஸ் கட்சி தலைவர் நரசிம்மராவை, ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆட்சி அமைக்க அழைத்தார்.
எம்.பி., பதவி இல்லாத நிலையில், நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின், அதே ஆண்டு நவம்பர் 17ம் தேதி நந்தியால் லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஐந்து லட்சத்து 80 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். மெஜாரிட்டி இல்லாத நிலையிலும், நரசிம்மராவ் பிரதமராக தொடர்ந்து பதவியில் நீடித்தார்.
இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில் இந்திரா காங்கிரஸ் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது. என்றாலும், 543 இடங்களை கொண்ட லோக்சபாவில், காங்கிரசுக்கு 232 இடங்களே கிடைத்தன. ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், தனிபெருங்கட்சி என்ற முறையில், இந்திரா காங்கிரஸ் கட்சி தலைவர் நரசிம்மராவை, ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆட்சி அமைக்க அழைத்தார்.
எம்.பி., பதவி இல்லாத நிலையில், நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின், அதே ஆண்டு நவம்பர் 17ம் தேதி நந்தியால் லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஐந்து லட்சத்து 80 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். மெஜாரிட்டி இல்லாத நிலையிலும், நரசிம்மராவ் பிரதமராக தொடர்ந்து பதவியில் நீடித்தார்.
Subscribe to:
Posts (Atom)
